பதிவு செய்த நாள்
05 ஜூன்2012
02:52
நடப்பாண்டின், சென்ற மே மாதத்தில், சிமென்ட் விற்பனை, 11-13 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டுள்ளது என, தனியார் ஆய்வு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.உள்நாட்டில் சிமென்ட் தயாரிப்பில், பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில், அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ், அம்புஜா சிமென்ட்ஸ், ஏ.சி.சி., இந்தியா சிமென்ட்ஸ், ராம்கோ, பாரதி சிமென்ட்ஸ் ஆகியவை முன்னணியில் உள்ளன.
உற்பத்தி திறன் :நாட்டின் ஒட்டுமொத்த சிமென்ட் உற்பத்தித் திறனில் (33 கோடி டன்), அல்ட்ராடெக், ஏ.சி.சி., அம்புஜா ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்களிப்பு, மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற 2011-12ம் நிதியாண்டின், நான்காவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், பருவ மழை துவங்காத நிலையில், சந்தையில் சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் அளிப்பு அதிகரித்துள்ளது. இதனால், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், சிமென்ட் விற்பனை சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற மே மாதத்தில், அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின், சிமென்ட் விற்பனை, 19.30 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 11.9 சதவீதம் (17.30 லட்சம் டன்) அதிகமாகும். இந்நிறுவனம், ஆண்டுக்கு, 2.50 கோடி டன் சிமென்ட் தயாரிக்கும் திறன் கொண்டதாகும்.மதிப்பீட்டு காலத்தில், அல்ட்ரா டெக் நிறுவனத்தின் விற்பனை, 10.6 சதவீதம் அதிகரித்து, 35.80 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அம்புஜா குழுமத்தின் துணை நிறுவனமான ஏ.சி.சி.நிறுவனத்தின் விற்பனை, 3.01 சதவீதம் உயர்ந்து, 20.50 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
சென்ற மே மாதத்தில், ஒட்டுமொத்த அளவில், சிமென்ட் விற்பனை, 11-13 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது. அ@தசமயம், அல்ட்ராடெக் மற்றும் ஏ.சி.சி. நிறுவனங்களின் வளர்ச்சி, 10-12 சதவீதம் என்றளவில் இருந்தது.உள்நாட்டில், அடிப்படை மற்றும் கட்டுமான பணிகளில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், சிமென்ட் நிறுவனங்களின் விற்பனை, 8-9 சதவீதம் என்றளவில் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 6.5 சதவீதம் என்றளவில் இருந்தது.
பாதிப்பு:கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு பிப்ரவரி மாதங்களில்,
10 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டிருந்த சிமென்ட் விற்பனை, சென்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், 7.5 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.ஏப்ரல் மாதத்தில், வட மாநிலங்கள், ஆந்திராவில், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த அளவில், சிமென்ட் விற்பனை பாதிப்படைந்தது.மார்ச் மாதத்தில், 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிமென்ட், 307 ரூபாய்க்கு விற்பனையானது. இது, மே மாதத்தில், 5.5 சதவீதம் குறைந்து, சராசரியாக, 290 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவும், மே மாதத்தில், சிமென்ட் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|