நோக்கியா போன் விலை குறைப்புநோக்கியா போன் விலை குறைப்பு ... சிமென்ட் விற்பனை 13 சதவீதம் வளர்ச்சி- :பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - சிமென்ட் விற்பனை 13 சதவீதம் வளர்ச்சி- :பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - ...
இந்திய கயிறு பொருட்கள் 97 நாடுகளுக்கு ஏற்றுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2012
02:50

புதுடில்லி:நம் நாட்டின் கயிறு மற்றும் கயிறு பொருட்கள், உலகளவில், 97 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக, கயிறு பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.தமிழகம்:நாட்டில், கேரளா, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில், அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன. நாட்டின் தேங்காய் உற்பத்தி அபரிமிதமாக உள்ளது. எனவே, இம்மாநிலங்களில், கயிறு சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.கயிறு மூலம் ரப்பர் கலந்த மிதியடி, தரை விரிப்பு உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் தயாராகும், கயிறு பொருட்களுக்கு அமெரிக்கா முக்கிய சந்தையாக திகழ்கிறது.இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்ரேலியா உள்ளிட்ட 97 நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகின் மொத்த கயிறு பொருட்கள் உற்பத்தியில், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் பங்களிப்பு, 90 சதவீதம் அதாவது, 3.50 லட்சம் டன் என்றளவில் உள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், அளவின் அடிப்படையில், கயிறு பொருட்கள் ஏற்றுமதி, 3.82 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 19 சதவீதம் (3.21 லட்சம் டன்) அதிகமாகும்.வளர்ச்சி:இதே நிதியாண்டுகளில், மதிப்பின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 19 சதவீதம் வளர்ச்சிகண்டு, 807 கோடியிலிருந்து, 957 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 2,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக, கயிறு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)