பதிவு செய்த நாள்
05 ஜூன்2012
02:50
புதுடில்லி:நம் நாட்டின் கயிறு மற்றும் கயிறு பொருட்கள், உலகளவில், 97 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக, கயிறு பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.தமிழகம்:நாட்டில், கேரளா, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில், அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன. நாட்டின் தேங்காய் உற்பத்தி அபரிமிதமாக உள்ளது. எனவே, இம்மாநிலங்களில், கயிறு சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.கயிறு மூலம் ரப்பர் கலந்த மிதியடி, தரை விரிப்பு உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் தயாராகும், கயிறு பொருட்களுக்கு அமெரிக்கா முக்கிய சந்தையாக திகழ்கிறது.இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்ரேலியா உள்ளிட்ட 97 நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகின் மொத்த கயிறு பொருட்கள் உற்பத்தியில், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் பங்களிப்பு, 90 சதவீதம் அதாவது, 3.50 லட்சம் டன் என்றளவில் உள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், அளவின் அடிப்படையில், கயிறு பொருட்கள் ஏற்றுமதி, 3.82 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 19 சதவீதம் (3.21 லட்சம் டன்) அதிகமாகும்.வளர்ச்சி:இதே நிதியாண்டுகளில், மதிப்பின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 19 சதவீதம் வளர்ச்சிகண்டு, 807 கோடியிலிருந்து, 957 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 2,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக, கயிறு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|