பதிவு செய்த நாள்
05 ஜூன்2012
02:55
புதுடில்லி;நாட்டின் மருந்து துறையின் சந்தை மதிப்பு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த மூன்று நிதியாண்டுகளில், உள்நாட்டின் மருந்து துறையின் சந்தை மதிப்பு, ஒட்டு மொத்த அளவில் ஆண்டுக்கு, 12.4 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது. இது, 2011-12 மற்றும் 2013-14 ஆகிய மூன்று நிதியாண்டுகளில், ஒட்டு மொத்த அளவில், ஆண்டுக்கு 15.3 சதவீதம் என்றளவில் வளர்ச்சி காணும் என, பார்க்லேஸ் கேப்பிட்டல் ஆய்வு நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
உள்நாட்டில் ஆண்டுதோறும், வீரியமிக்க பல புதிய மருந்து வகைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் சிறந்த தரம் மற்றும் கட்டுபடியாகும் விலை போன்றவற்றுடன், மருந்து பொருட்களை சிறந்த முறையில் வினியோகிக்கும் வகையில், நாடு தழுவிய அளவில் விற்பனை பிரதிநிதிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது போன்றவற்றால், நாட்டின் மருந்து துறையின் சந்தை மதிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி காணும் என, இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|