பதிவு செய்த நாள்
05 ஜூன்2012
02:58
மும்பை:இந்திய பங்குச் சந்சைதகளில் இருந்து, சென்ற மே மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் 347 கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளன. தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்த அளவிற்கு, அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளன.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் மந்தநிலை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்றவற்றால், பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு குறைந்துள்ளது.சென்ற மே மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், 42 ஆயிரத்து 443 கோடி ரூபாய் அளவிற்கு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருந்தன.
இதே மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 42 ஆயிரத்து 790 கோடி ரூபாயை பங்குச் சந்தையில் இருந்து திரும்ப பெற்றுள்ளன. ஆக, சென்ற மே மாதத்தில், நிகர அளவில் பங்குச் சந்தையில் இருந்து, 347 கோடி ரூபாய் மதிப்பிற்கு அன்னிய முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம், நாட்டின் கடன் தகுதி மதிப்பீட்டை எஸ் அண்டு பி நிறுவனம் குறைத்ததை அடுத்து, அன்னிய நிதி நிறுவனங்கள், 1,109 கோடி ரூபாய் அளவிற்கு பங்குச் சந்தையில் இருந்து திரும்ப பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|