பதிவு செய்த நாள்
05 ஜூன்2012
15:01
புதுடில்லி: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ. 2575 கோடி முதலீட்டில் இரண்டு புதிய ஆலைகளை நிறுவ முடிவுசெய்துள்ளது. இதனை பற்றி நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பவன் முஞ்ஜல் பேசுகையில், 2014க்குள் இந்தப் புதிய ஆலைகள் குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்படும். ராஜஸ்தான் மாநிலம் நீம்ராணாவில் ரூ.400 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் ஆலையில் ஆண்டுக்கு ஏழரை லட்சம் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கப்படும்.குஜராத்தில் அமைக்கப்படவிருக்கிற ஆலையில் ரூ. 1,100 கோடி முதலீடு செய்யப்படும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இதன் கட்டுமானப் பணிகள் முடிந்து உற்பத்தி தொடங்கிவிடும். இங்கு ஆண்டுக்கு 12 லட்சம் பைக்குகள் உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்.இந்த இரு ஆலைகளும் செயல்பாட்டுக்கு வந்ததும் ஹீரோவின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 90 லட்சம் வாகனங்களாக இருக்கும்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அருகே 250 ஏக்கர் பரப்பில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒன்று தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக ரூ. 400 கோடி முதலீடு செய்யப்படுகிறது.இப்போது ஹரியாணாவின் தாருஹேரா, குர்கான் ஆகிய இடங்களிலும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரிலும் உள்ள ஆலைகளில் ஆண்டுக்கு 70 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.இவற்றின் மேம்பாட்டுக்கு ரூ. 500 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதர வகை முதலீடுகளுக்காக ரூ. 175 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை ரூ. 50 ஆயிரம் கோடி வருவாய் உள்ள நிறுவனமாக உருவாக்கத் திட்டமிட்டு வருகிறோம் என்றார்
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|