பதிவு செய்த நாள்
06 ஜூன்2012
00:20
புதுடில்லி:ரயில்களில் கொண்டு செல்லப்படும், பார்சல் மற்றும் லக்கேஜ் கட்டணம், 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண உயர்வு, சென்ற 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.ரயில்களில் அனுப்பப்படும், செய்தி பத்திரிகைகள் மற்றும் இதழ்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பார்சல்கள் மற்றும் லக்கேஜ் போன்றவற்றின் மீதான கட்டணம், 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், ரயில்வே துறைக்கு, கூடுதலாக, 370 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், இதன் வாயிலான வருவாய், 1,600 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. சென்ற மார்ச் மாதத்தில், ரயில்வே சரக்கு கட்டணம்,20 சதவீதம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பார்சல் கட்டண உயர்வால், நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|