கடந்த 2011-12ம் நிதி ஆண்டில் நாட்டின் யூரியா உர இறக்குமதி 78 லட்சம் டன்கடந்த 2011-12ம் நிதி ஆண்டில் நாட்டின் யூரியா உர இறக்குமதி 78 லட்சம் டன் ... தங்கம் விலை சர்ர்ர்.... சவரனுக்கு ரூ.632 குறைவு தங்கம் விலை சர்ர்ர்.... சவரனுக்கு ரூ.632 குறைவு ...
நிகர நேரடி வரி வசூல் ரூ.4.95 லட்சம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2012
00:35

புதுடில்லி:கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் நிகர நேரடி வரி வசூல், 4 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், திரட்டப்பட்ட தொகையை விட, 10.74 சதவீதம் (4 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகமாகும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்த நிலை:இருப்பினும், இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அளவான, 5 லட்சம் கோடி ரூபாயை விட குறைவாகும். கடந்த நிதியாண்டில், நேரடி வரி வசூல் வாயிலாக, முதலில், 5 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, இந்த இலக்கை, 5 லட்சம் கோடி ரூபாயாக குறைத்தது.முந்தைய 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் நேரடி வரி வசூல், அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 18 சதவீதம் வளர்ச்சிகண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த நேரடி வரி வசூல், அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 13.02 சதவீதம் அதிகரித்து, அதாவது, 5 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 5 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு, சென்ற நிதியாண்டில், 95 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டது. இதனால், நிகர நேரடி வரி வசூல் குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக இருக்கும் என, முன்
கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொருளாதார வளர்ச்சி:ஆனால், மத்திய புள்ளியியல் துறையின், புள்ளி விவரத்தில், சென்ற நிதியாண்டில், நாட்டின் பொருளதார வளர்ச்சி, 6.5 சதவீதமாக குறைந்துள்ளது என, அறிவித்துள்ளது. பொருளாதார சுணக்க நிலையால் தான், நேரடி வரி வசூல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள், செலுத்திய மொத்த வரி, முந்தைய நிதியாண்டை விட, 11.52 சதவீதம் அதிகரித்து, 3 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 3 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வருமான வரி:இதேபோன்று, தனிநபர் வருமான வரி, 16.20 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், பங்கு பரிவர்த்தனை வரி, 20.95 சதவீதம் குறைந்து, 7,185 கோடி ரூபாயிலிருந்து, 5,656 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இருப்பினும், இதே ஆண்டுகளில், செல்வ வரி, 14.56 சதவீதம் உயர்ந்து, 687 கோடி ரூபாயிலிருந்து, 787 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, இவ்வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)