பதிவு செய்த நாள்
09 ஜூன்2012
10:50
சென்னை: குறிப்பிட்ட தேசியமய மற்றும் தனியார் துறை வங்கிகளிலும், வருமான வரி செலுத்தலாம் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தனிநபர்கள், கடந்த 2011-12ம் நிதியாண்டிற்கான, வருமான வரி தாக்கல் செய்ய, ஜூலை 31ம் தேதி கடைசி நாள். இதற்கான வருமான வரியை செலுத்துவோர் வசதிக்காக, ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கூடுதல், "கவுன்ட்டர்'கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட தேசியமய மற்றும் தனியார் வங்கிகளில், பொதுமக்கள் வருமான வரி செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ., - ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேசன் வங்கி, ஐ.ஓ.பி., - பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய தேசியமய வங்கிகளிலும், யூகோ வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி, ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., - ஐ.டீ.பி.ஐ., - எச்.டி.எப்.சி., ஆகிய தனியார் வங்கிகளிலும், வரும் ஜூலை 31ம் தேதிக்குள், பொதுமக்கள் வருமான வரி செலுத்தலாம். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|