பதிவு செய்த நாள்
10 ஜூன்2012
01:48
சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில், 800க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. முட்டை உற்பத்தி:இவற்றின் மூலம், நாள்தோறும் மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்திக்கு, 16 முதல், 18 வார வயதுடைய கோழிகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தக் கோழிகள், 52 முதல் 70 வாரம் வரை முட்டையிடும். எனினும், 52வது வாரத்துக்கு பின் கோழி முட்டையிடுவது குறைந்துவிடும். எனவே, 52 வாரத்துக்கு பிறகு முட்டைக் கோழி, இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது.குறிப்பாக, முட்டைக் கோழிகள், கேரள மாநிலத்துக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்திலிருந்து அனுப்பப்படும் முட்டைக் கோழிகளுக்கு, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு விலை நிர்ணயம் செய்கிறது.அதன்படி, தற்போது ஒரு கிலோ முட்டைக் கோழி விலை, 48 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே 31ம் தேதி, ஒரு கிலோ முட்டைக் கோழி விலை, 44 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இறைச்சி:இதையடுத்து, முட்டைக் கோழி விலை படிப்படியாக ஏற்றம் கண்டு, 48 ரூபாய் என, உச்சத்தை தொட்டுள்ளது. இவ்விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்பதால், இறைச்சிப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறியதாவது:கோழித் தீவனத்தின் விலை, கடந்த இரண்டு மாதங்களில், 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக@வ முட்டை @காழி விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|