பதிவு செய்த நாள்
11 ஜூன்2012
04:21
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில், சர்க்கரை விலை மூட்டைக்கு, 20 ரூபா# உயர்ந்து, 3,055 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், பொரி கடலை விலையும் மூட்டைக்கு 100 ரூபா# உயர்ந்துள்ளது. இருப்பினும், பருப்பு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.இவை தவிர, விருதுநகர் சந்தையில், ஒரு டின் பாமாயில் விலை 1,035 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் 1,230 ரூபாயாகவும் இருந்தது.நிலக்கடலைபருப்பு விலை மூட்டைக்கு 5,200 ஆகவும், கடலை புண்ணாக்கு விலை 3,600 ரூபாயாகவும் இருந்தது.
இந்தோனேஷியா மற்றும் மலேசியாவிலிருந்து பாமாயில் வரத்து அதிகரித்துள்ளதால் இதன் விலை குறைந்துள்ளது.உளுந்து மூட்டை 3,500 லிருந்து 3,600 ரூபாயாகவும், பர்மா உளுந்து 3,300 ஆகவும், பொடி உளுந்து 3,200 ஆகவும், உளுந்தம் பருப்பு 5,400 ஆகவும், பர்மா உளுந்தம் பருப்பு 4,900 ரூபாயாகவும் உள்ளது. துவரை விலை 3,900 ரூபாயிலிருந்து 4,000 வரையும், பொடித் துவரை 3,800 ரூபாயாகவும், துவரம் பருப்பு 6,500 ஆகவும், பொடி துவரம் பருப்பு 5,700 ரூபாயாகவும் உள்ளது.
நாட்டு பாசிப்பயறு 5,400 லிருந்து 5,700 வரையும், லயன் பாசிப்பயறு 6,000 ஆகவும், பாசிப் பருப்பு 5,300 ஆகவும், பொடிப் பாசிப் பருப்பு 5,000 ரூபாயாகவும் உள்ளது. கொண்டைக் கடலை விலை 5,250 ரூபாயாகவும், பொரி கடலை 3,960 ரூபாயாகவும் உள்ளது. மைதா 2,480 ஆகவும், ரவை 2,290 ரூபாயாகவும் உள்ளது. விருதுநகர் Œந்தையில் கடந்த வாரம் பயறு, பருப்பு வியாபாரம் மந்தமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|