ஏலத்திற்கு வருகிறது முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஏலத்திற்கு வருகிறது முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர் ... சீனாவை விட, இந்தியாவில் விமான கட்டணம் 300 சதவீதம் அதிகம் சீனாவை விட, இந்தியாவில் விமான கட்டணம் 300 சதவீதம் அதிகம் ...
நாட்டில் 84 ஆயிரம் ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்கள் விதைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2012
01:21

புதுடில்லி:நடப்பு கரீப் பருவத்தில், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் அதிகளவில், பயிரிடப்பட்டுள்ளன என, வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், எண்ணெய் வித்துக்கள் பயிரிடுவதில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. நடப்பு கரீப் பருவத்தில், இதுவரையிலுமாக, 84 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில், எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், 24 ஆயிரத்து 200 ஹெக்டேரில், நிலக்கடலையும், 38 ஆயிரத்து 600 ஹெக்டேரில், எள் விதைகளும் பயிரிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில், நிலக்கடலை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 14 ஆயிரம் ஹெக்டேரிலும், தமிழகத்தில் 10 ஆயிரத்து 200 ஹெக்டேரிலும் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 25 ஆயிரம் ஹெக்டேரில், எள் பயிரிடப்பட்டுள்ளது.நடப்பு பருவத்தில், 17 லட்சத்து 49 ஆயிரம் ஹெக்டேரில், பருப்பு வகைகள் பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதுவரையிலுமாக, 15 லட்சத்து 11 ஆயிரம் ஹெக்டேரில் தான், இவை பயிரிடப்பட்டுள்ளன.மேலும், 50 லட்சத்து 57 ஆயிரம் ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. 7 லட்சத்து 98 ஆயிரம் ஹெக்டேரில், சணல் பயிரிடப்பட்டுள்ளது என, அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)