பதிவு செய்த நாள்
12 ஜூன்2012
01:21
புதுடில்லி:நடப்பு கரீப் பருவத்தில், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் அதிகளவில், பயிரிடப்பட்டுள்ளன என, வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், எண்ணெய் வித்துக்கள் பயிரிடுவதில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. நடப்பு கரீப் பருவத்தில், இதுவரையிலுமாக, 84 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில், எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், 24 ஆயிரத்து 200 ஹெக்டேரில், நிலக்கடலையும், 38 ஆயிரத்து 600 ஹெக்டேரில், எள் விதைகளும் பயிரிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில், நிலக்கடலை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 14 ஆயிரம் ஹெக்டேரிலும், தமிழகத்தில் 10 ஆயிரத்து 200 ஹெக்டேரிலும் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 25 ஆயிரம் ஹெக்டேரில், எள் பயிரிடப்பட்டுள்ளது.நடப்பு பருவத்தில், 17 லட்சத்து 49 ஆயிரம் ஹெக்டேரில், பருப்பு வகைகள் பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதுவரையிலுமாக, 15 லட்சத்து 11 ஆயிரம் ஹெக்டேரில் தான், இவை பயிரிடப்பட்டுள்ளன.மேலும், 50 லட்சத்து 57 ஆயிரம் ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. 7 லட்சத்து 98 ஆயிரம் ஹெக்டேரில், சணல் பயிரிடப்பட்டுள்ளது என, அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|