பதிவு செய்த நாள்
12 ஜூன்2012
12:27
மதுரை:மதுரையில் நடந்த அரசு பொருட்காட்சியை 4.31 லட்சம் பேர் பார்வையிட்டனர். நுழைவு கட்டணமாக அரசுக்கு ரூ. 39 லட்சம் வசூலானது.தமுக்கம் மைதானத்தில் ஏப்., 21 முதல் ஜூன் 10 வரை பொருட்காட்சி நடந்தது. அரசு மற்றும் சார்பு நிறுவனங்கள் அரங்குகளை அமைத்திருந்தன. 45 நாட்கள் நடந்த பொருட்காட்சியில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 796 பேர் பார்வையிட்டனர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 39 லட்சத்து 38 ஆயிரத்து 595 கிடைத்தது.பொருட்காட்சியில் சிறந்த அரங்குகளை தேர்வு செய்ய ஆர்.டி.ஓ., துரைராஜ், நேர்முக உதவியாளர் அலிஅக்பர், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு தேர்வு செய்தபடி, முதல் பரிசு விவசாய துறைக்கு வழங்கப்பட்டது. 2ம் பரிசு ஊரக வளர்ச்சி முகமை, 3ம் பரிசு கூட்டுறவு துறை மற்றும் சமூகநலத்துறைக்கு வழங்கப்பட்டன. இத்துறைகளின் இணைஇயக்குனர் சங்கரலிங்கம், திட்ட இயக்குனர் பிரபாகர், இணைப்பதிவாளர் குருமூர்த்தி மற்றும் சமூகநல அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.அரசு சார்பு நிறுவனங்களில் முதலிடம் பெற்ற குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நிர்வாக பொறியாளர் முருகேசன், 2ம் இடம் பெற்ற மின்வாரியத்தின் ரெஜினாராஜகுமாரி, 3ம் இடம் பெற்ற மாநகராட்சி உதவி பொறியாளர் முருகேசப்பாண்டியனிடம் கேடயம் வழங்கப்பட்டது. மத்திய அரசு துறையான ரிசர்வ் பாங்க் சார்பில் அலுவலர் சந்திரசேகரனுக்கு கேடயத்தை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா வழங்கினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|