பதிவு செய்த நாள்
12 ஜூன்2012
23:54
புதுடில்லி:நடப்பாண்டு மே மாதத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 58 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 3 சதவீதம் (59 ஆயிரத்து 700 டன்) குறைவு என, ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 4 சதவீதம் உயர்ந்து, 80 ஆயிரத்து 120 டன்னிலிருந்து, 83 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. உள்நாட்டில், இயற்கை ரப்பர் உற்பத்தி குறைந்ததை அடுத்து, இதன் இறக்குமதி, 13 சதவீதம் அதிகரித்து, 16 ஆயிரத்து 293 டன்னிலிருந்து, 18 ஆயிரத்து 419 டன்னாக உயர்ந்துள்ளது.
அதேசமயம், ரப்பர் ஏற்றுமதி, 63 சதவீதம் சரிவடைந்து, 3,031 டன்னிலிருந்து, 1,131 டன்னாக குறைந்துள்ளது. சென்ற மே மாதத்தில், ரப்பர் கையிருப்பு, 2 லட்சத்து 32 ஆயிரம் டன் என்றளவில் உள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 1 லட்சத்து 10 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|