பதிவு செய்த நாள்
16 ஜூன்2012
00:45
மும்பை:நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 13 ஆயிரத்து 315 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாத, ஏற்றுமதியை விட, 7.46 சதவீதம் (14 ஆயிரத்து 389 கோடி ரூபாய்) குறைவாகும்.கணக்கீட்டு மாதங்களில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 23.98 சதவீதம் குறைந்து, 9,092 கோடியிலிருந்து, 6,911 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 46.63 சதவீதம் உயர்ந்து, 2,363 கோடியிலிருந்து, 3,464 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தங்க காசுகள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி, 8.45 சதவீதம் குறைந்து, 2,231 கோடியிலிருந்து, 2,043 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. வண்ண நவரத்தினங்கள் ஏற்றுமதி, 15.92 சதவீதம் வளர்ச்சி கண்டு, 77.62 கோடியிலிருந்து, 88.98 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 10.44 சதவீதம் குறைந்து, 183 கோடியிலிருந்து, 164 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.முத்துக்கள் ஏற்றுமதி, 1.11 கோடியிலிருந்து, 3.61 கோடி ரூபாயாகவும், செயற்கை கற்கள் ஏற்றுமதி, 11 கோடியிலிருந்து, 12.33 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கச்சா வைர ஏற்றுமதி, 41.53 சதவீதம் வளர்ச்சி கண்டு, 422 கோடியிலிருந்து, 597 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதர ஆபரணங்கள் ஏற்றுமதி, 9 கோடியிலிருந்து, 30 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|