பதிவு செய்த நாள்
17 ஜூன்2012
16:21
மும்பை : மகாராஷட்டிரா மாநிலத்தில் ரூ.1 ஆயிரத்து 020 கோடி முதலீட்டில் புதிய ஆலையை அமைக்க உள்ளது அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம். தொழில் துறையில் மகாராஷ்டிரா மாநிலத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர அம்மாநில முதல்வர் ப்ருத்விராஜ் சவான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக இதுவரை 335 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டங்களின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 76 ஆயிரத்து 832 கோடி என்று மாநில அரசு தெரிவித்திருக்கிறது. அதன் ஒருகட்டமாக அம்மாநிலத்தின் புனே மாவட்டத்தில் சாகண் பகுதியில் உருவாகி வரும் பெருந்தொழிலக மண்டலத்தில் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் புதிய மின் ஆலையை துவங்க இருக்கிறது. சுமார் ரூ. 1 ஆயிரத்து 020 கோடியில் உருவாக இருக்கும் இந்த ஆலை 2013ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வர இருக்கின்றன. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ப்ருதிவிராஜ் சவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|