பதிவு செய்த நாள்
20 ஜூன்2012
15:27
புதுடில்லி: இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணங்களினால் கார் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆலைகளை தாற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளன.கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படாததால், வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. மேலும் டீசல் கார்களுக்கான உற்பத்தி வரியையும் அதிகரிக்க அரசு உத்தேசித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கார்களின் விற்பனை சரிந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஜூலை மாதத்தில் சில நாள்கள் ஆலையை மூட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. டாடா நிறுவனம் இம்மாதம் மூன்று நாள் வர்த்தக வாகன உற்பத்திப் பிரிவை மூட முடிவு செய்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் அடுத்த வாரம் முழுவதும் மூட முடிவு செய்துள்ளது. டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனம் பெட்ரோல் கார்களின் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளது. ஃபியட் நிறுவனம் தனது பெட்ரோல் கார்கள் சரிவர விற்பனையாகாததால் உற்பத்தியை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|