பதிவு செய்த நாள்
22 ஜூன்2012
14:50
சென்னை : மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படும், "லூப்ரிகன்ட்' (மசகு எண்ணெய்) விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 7.50 ரூபாய் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதற்கு, நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, விலை உயர்வில், இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியிலிருந்து பொது மக்கள் மீள்வதற்குள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட மோட்டார் வாகனங்களில், "இன்ஜின்' உராய்வை குறைக்க பயன்படும், "லூப்ரிகன்ட்' விலை, அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த, "லூப்ரிகன்ட்' விற்பனையாளர் சிவகுமார் கூறியதாவது: டி.வி.எஸ்., இரு சக்கர வாகனங்களில், ஒரு லிட்டர் பெட்ரோலுடன், 25 மி.லி.,யும், ஆட்டோக்களில், 40 மி.லி.,யும், "லூப்ரிகன்ட்' போடப்படுகிறது. மற்ற, நான்கு ஸ்ட்ரோக் கொண்ட, இரு சக்கர வாகனங்களில், ஒவ்வொரு, "சர்வீசின்' போதும், "இன்ஜின் ஆயில்' மாற்றப்படுகிறது. தற்போது, "லூப்ரிகன்ட்'டின் விலை, லிட்டருக்கு, 15 முதல், 18 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர் என்றார்.ஐ.ஓ.சி., நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, ""டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, "லூப்ரிகன்ட்' உற்பத்திக்கு பயன்படும், "பேஸ் ஆயிலின்' விலை உயர்வு போன்ற காரணங்களால், விலை உயர்த்தப்பட்டுள்ளது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|