பதிவு செய்த நாள்
23 ஜூன்2012
00:41
புதுடில்லி:நடப்பாண்டின் ஏப்ரல், மே மாதங்களில், நாட்டின் மொத்த தங்கம் இறக்குமதியில், 620 கோடி டாலர் (31 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியைவிட குறைவு என, மத்திய நிதித் துறைச் செயலர் ஆர்.எஸ்.குஜ்ரால் தெரிவித்துள்ளார்.இந்தியாவில், தங்கத்திற்கான தேவை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, அதிகமாக உள்ளது. அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியா முன்னணியில் உள்ளது.நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதற்கு, தங்கம் இறக்குமதியும் காரணமாக உள்ளது. இதையடுத்து, மத்திய அரசு, தங்க இறக்குமதி வரியை, இரண்டு மடங்கு அதாவது, 2 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தியது. இதன் விளைவாக, சென்ற ஏப்ரல், மே மாதங்களில், தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|