பதிவு செய்த நாள்
24 ஜூன்2012
00:51
காரைக்குடி:அரிசி விலை கடந்த ஒரு வாரத்தில், கிலோவுக்கு மூன்று முதல் ஐந்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. உயர்ரகமான "டீலக்ஸ்' பொன்னி, 40 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது.அறுவடை முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், நெல் வரத்து இல்லாததால், அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. காரைக்குடி, புதுவயலில் 150க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இங்கு கொண்டு வரப்படும் நெல் அரைக்கப்பட்டு அரிசியாக பிற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், தற்போது அறுவடை இல்லாததால், நெல்லின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 1,100 ரூபாயாக இருந்த "டீலக்ஸ்' அரிசி பொன்னி நெல் (பழையது) 1,150 ரூபாயாகவும், 850 ரூபாயாக இருந்த புதியது 1,070 ரூபாயாகவும், 820 ரூபாயாக இருந்த அதிசய பொன்னி 920 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. நெல் விலை உயர்வால், அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.100 கிலோ 3200 ரூபாயாக இருந்த "டீலக்ஸ்' அரிசி, 3,500 ரூபாயாகவும், 2,900 முதல் 3,000 ரூபாய் வரை இருந்த டீலக்ஸ் புதுசு 3,200 ரூபாயாகவும், 2,500 ரூபாயாக இருந்த "கல்சர்' 2,750 ரூபாயாகவும், 2,600 ரூபாய்க்கு விற்பனையான அதிசய பொன்னி 2,900 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.அரிசி கடைகளில் "டீலக்ஸ்' பொன்னி ஒரு கிலோ பழையது 38 ரூபாயாகவும், புதியது 35 ரூபாயாகவும், அதிசய பொன்னி 34 ரூபாயாகவும், "கல்சர்' 30 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. "டீலக்ஸ்' பொன்னி அரிசி இந்த மாதத்தில் 40 ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|