பதிவு செய்த நாள்
29 ஜூன்2012
00:21
பெங்களூரு:நடப்பு 2012ம் ஆண்டின், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், நாட்டின் பிரின்டர் விற்பனை, 6 லட்சத்து 95 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 3.9 சதவீதம் அதிகமாகும் என, ஆய்வு நிறுவனமான, "கார்ட்னர்' தெரிவித்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்த நிலையால், தகவல் தொழில்நுட்பத் துறையில், பிரின்டர் பயன்பாடு குறைந்துள்ளது.
இருப்பினும், அரசின் ஊக்குவிப்பும், வீட்டு பயன்பாட்டிற்கான பிரின்டர் விற்பனையும், ஒட்டுமொத்த பிரின்டர் விற்பனை உயர காரணம் என கூறப்படுகிறது.இந்திய பிரின்டர் சந்தையில், எச்.பி.நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நடப்பாண்டின் முதல் காலாண்டில், இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 58.7 சதவீதம் என்றளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து, கேனன் (12.7 சதவீதம்), எப்சன் (9.7 சதவீதம்), சாம்சங் (8.8 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|