பதிவு செய்த நாள்
02 ஜூலை2012
01:43
புதுடில்லி:நடப்பு கரீப் பருவத்தில், இதுவரையிலுமாக, நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன .சர்வதேச அளவில், உணவு தானியங்கள் பயிரிடுவதில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. நடப்பு வேளாண் பருவத்தில், இதுவரையிலுமாக, 30 லட்சத்து 72 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், நெல் பயிரிடப்பட்டுள்ளது.
4 லட்சம் ஹெக்டேரில், பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுள்ளன. 10 லட்சத்து 42 ஆயிரம் ஹெக்டேரில், உணவு தானியங்கள் பயிரிடப்பட்டுள்ளன. 10 லட்சத்து 77 ஆயிரம் ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்களும், 52 லட்சத்து 22 ஆயிரம் ஹெக்டேரில் கரும்பும் பயிரிடப்பட்டுள்ளன.31 லட்சத்து 38 ஆயிரம் ஹெக்டேரில், பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. 8 லட்சத்து 10 ஆயிரம் ஹெக்டேரில், சணல் பயிரிடப்பட்டுள்ளது என, @வளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|