பதிவு செய்த நாள்
05 ஜூலை2012
00:00
புதுடில்லி: தமிழகத்தில், பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனப் பொருட் கள் முதலீட்டு மண்டலம் (பி.சி.பி.ஐ.ஆர்.,) அமைக்க, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு அனுமதி வழங்கியுள்ளது.கடலூர்இதுகுறித்து மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:தமிழகத்தில், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில், பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (பி.சி.பி.ஐ.ஆர்.,) அமைப்பதன் மூலம், அங்கு, 92,160 கோடி ரூபாய் மதிப்பிற்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, இந்த மண்டலத்தில், 22,160 கோடி ரூபாய் மதிப்பிலானமுதலீட்டு திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.கடலூர் மாவட்டத்தில், நாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 9,660 கோடி ரூபாய் திட்ட செலவில், ஆண்டுக்கு, 60 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்ட ஆலையை அமைத்து வருகிறது. öŒன்னை பெட்@ராலியம்மேலும், சி.பி.சி.எல். நிறுவனம், 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 1.50 கோடி டன் உற்பத்தி திறன் கொண்ட, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய ரசாயன பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|