பதிவு செய்த நாள்
09 ஜூலை2012
04:36
நாமக்கல்:ஆடி மாதம் துவங்கும் முன்னரே பூக்களின் விலை சரியத் துவங்கியுள்ளது. இதனால், மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ஆடி மாதம், திருமணம் உள்ளிட்ட சுப முகூர்த்த காரியங்கள் நடைபெறுவது குறையும் என்பதால் பூக்களின் விலையும் ஆடி மாதத்தில் இறங்கு முகமாக காணப்படுவது வழக்கம்.
வரும், 16ம் தேதி ஆடி மாதம் துவங்குகிறது.நாமக்கல் மாவட்டத்தில் ப.வேலூர் தற்காலிக பஸ் நிலையம் அருகே பெரிய அளவிலான பூ சந்தை செயல்படுகிறது. இங்கு கரூர் மாவட்டம் சேமங்கி, வேலாயுதம்பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் ப.வேலூர், பரமத்தி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.நாமக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்று பூக்களுக்கு விலை நிர்ணயம் செய்து, அவற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்வர்.
இரு தினங்களுக்கு முன், 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ குண்டு மல்லி, நேற்றைய நிலவரப்படி, 150 ரூபாய்க்கும், 300 ரூபாய் வரை விற்பனையான முல்லைப் பூ, 200 ரூபாயாகவும், 200 ரூபாய் வரை விற்பனையான சம்பங்கி, 100 ரூபாயாகவும், 110 ரூபாய் வரை விற்பனையான அரளி, 80 ரூபாய் எனவும் சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|