பதிவு செய்த நாள்
14 ஜூலை2012
00:19
உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட, காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்குடன், நாடு முழுவதும் உள்ள சேமிப்புக் கிடங்குகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
தோட்டக்கலை:இதைத் தொடர்ந்து, தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் உள்ள, குளிர்பதனக் கிடங்குகளில், 2 முதல் 2.20 கோடி டன் உருளைக்கிழங்கு இருந்ததாகவும், அதில், 15 சதவீதம் விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோ உருளைக்கிழங்கு, தற்போது, 12 முதல் 23 ரூபாய் வரையும், ஒரு குவிண்டால், 1,200 முதல் 2,300 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில் கிலோ, 5 முதல் 6 ரூபாயாகவும், ஒரு குவிண்டால், 500 முதல் 600 ரூபாயாகவும் இருந்தது.உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள், உள்நாட்டில் அவற்றை விற்பனை செய்வதைவிட, வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யவே விரும்புகின்றனர்.
கிடங்குகள்:இதன் விலையை கட்டுக்குள் கொண்டுவர, அனைத்து மாநில அரசுகளும், கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள, உருளைக்கிழங்குகளை சந்தைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், மாநில அரசுகள், சந்தையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
செலவினம்:இதன்படி, உபரியாக உள்ள விளைபொருளை, மாநில அரசே நேரடியாக கொள்முதல் செய்யும். இதனால் ஏற்படும் செலவினத்தை, மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பகிர்ந்து கொள்ளும். இந்த நடைமுறையால், உருளைக்கிழங்கு விலை, கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அவ்வாறு வரவில்லையென்றால், உருளைக்கிழங்கிற்கு, குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்யும். இதனால், உள்நாட்டு சந்தைகளுக்கு, உருளை வரத்து அதிகரித்து, அதன் விலை குறையும். நாடு முழுவதும் உள்ள கிடங்குகளில், தற்போது, 29.5 லட்சம் டன் வெங்காயம் உள்ளது. இதில், 5 முதல் 10 சதவீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சரக்கு ரயில்:வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் உற்பத்தி குறைவாக உள்ள மாநிலங்களில், அவற்றின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், சோதனை அடிப்படையில் "தோட்டக்கலை எக்ஸ்பிரஸ்' என்ற சரக்கு ரயில் போக்குவரத்து திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. இதன்படி, மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து மேற்குவங்கம், பீகார் மாநிலங்களுக்கு வெங்காயம் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம், சாலை வாயிலாக நடைபெறும், 100 மணி நேர சரக்குப் போக்குவரத்து, ரயிலில், 30 மணிநேரமாக குறைந்துள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|