டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ்: சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை வாங்கியது:ஒப்பந்த மதிப்பு ரூ.464 கோடிடியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ்: சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை வாங்கியது:ஒப்பந்த ... ... சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை சரிவு சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை சரிவு ...
உருளைக்கிழங்கு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2012
00:19

உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட, காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்குடன், நாடு முழுவதும் உள்ள சேமிப்புக் கிடங்குகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
தோட்டக்கலை:இதைத் தொடர்ந்து, தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் உள்ள, குளிர்பதனக் கிடங்குகளில், 2 முதல் 2.20 கோடி டன் உருளைக்கிழங்கு இருந்ததாகவும், அதில், 15 சதவீதம் விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோ உருளைக்கிழங்கு, தற்போது, 12 முதல் 23 ரூபாய் வரையும், ஒரு குவிண்டால், 1,200 முதல் 2,300 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில் கிலோ, 5 முதல் 6 ரூபாயாகவும், ஒரு குவிண்டால், 500 முதல் 600 ரூபாயாகவும் இருந்தது.உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள், உள்நாட்டில் அவற்றை விற்பனை செய்வதைவிட, வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யவே விரும்புகின்றனர்.
கிடங்குகள்:இதன் விலையை கட்டுக்குள் கொண்டுவர, அனைத்து மாநில அரசுகளும், கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள, உருளைக்கிழங்குகளை சந்தைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், மாநில அரசுகள், சந்தையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
செலவினம்:இதன்படி, உபரியாக உள்ள விளைபொருளை, மாநில அரசே நேரடியாக கொள்முதல் செய்யும். இதனால் ஏற்படும் செலவினத்தை, மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பகிர்ந்து கொள்ளும். இந்த நடைமுறையால், உருளைக்கிழங்கு விலை, கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அவ்வாறு வரவில்லையென்றால், உருளைக்கிழங்கிற்கு, குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்யும். இதனால், உள்நாட்டு சந்தைகளுக்கு, உருளை வரத்து அதிகரித்து, அதன் விலை குறையும். நாடு முழுவதும் உள்ள கிடங்குகளில், தற்போது, 29.5 லட்சம் டன் வெங்காயம் உள்ளது. இதில், 5 முதல் 10 சதவீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சரக்கு ரயில்:வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் உற்பத்தி குறைவாக உள்ள மாநிலங்களில், அவற்றின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், சோதனை அடிப்படையில் "தோட்டக்கலை எக்ஸ்பிரஸ்' என்ற சரக்கு ரயில் போக்குவரத்து திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. இதன்படி, மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து மேற்குவங்கம், பீகார் மாநிலங்களுக்கு வெங்காயம் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம், சாலை வாயிலாக நடைபெறும், 100 மணி நேர சரக்குப் போக்குவரத்து, ரயிலில், 30 மணிநேரமாக குறைந்துள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)