பதிவு செய்த நாள்
14 ஜூலை2012
00:23
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மந்தமாக காணப்பட்டது. இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது என்ற செய்தி வெளியானதையடுத்து, இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
இருப்பினும், ஐரோப்பிய யூனியன் தலைவர்கள், நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்வர் என்ற நிலைப்பாட்டால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர் பொருட்கள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 18.85 புள்ளிகள் சரிவடைந்து, 17,213.70 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,342.88 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,182.29 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 8 புள்ளிகள் குறைந்து, 5,227.25 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,267.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,216.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|