பதிவு செய்த நாள்
16 ஜூலை2012
00:15
புதுடில்லி:நடப்பு பருவத்தில், சென்ற வெள்ளிக்கிழமை வரையிலுமாக நாட்டின் கோதுமை கொள்முதல், 3.81 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய பருவத்தின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை விட, 34 சதவீதம் (2.83 கோடி டன்) அதிகமாகும்.நடப்பு வேளாண் பருவத்தில், கோதுமை உற்பத்தி, 9 கோடி டன்னை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, இந்திய உணவு கழகம் (எப்.சி.ஐ.) மற்றும் மாநில அரசுகளின் முகமை அமைப்புகள் மூலம் கோதுமையை கொள்முதல் செய்து வருகிறது.
கோதுமை உற்பத்தி அதிகரித்ததையடுத்து, இந்திய உணவு கழகம் கையிருப்பில், 5 கோடி டன் கோதுமை உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், மத்திய பிரதேசத்தின் கோதுமை கொள்முதல், 50 லட்சம் டன்னிலிருந்து, 85 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், இதன் கொள்முதல் முறையே, 1.28 கோடி டன் மற்றும் 86 லட்சம் டன் என்றளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|