பதிவு செய்த நாள்
17 ஜூலை2012
10:57
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130.62 புள்ளிகள் அதிகரித்து 17233.93 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 37.70 புள்ளிகள் அதிகரித்து 5234.95 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான நேற்று மிகவும் மோசமாக இருந்தது. பருவமழை தாமதத்தால், அரிசி உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டில் 4 சதவீத வேளாண் உற்பத்தி இலக்கை எட்டுவது கடினம் என, மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.மேலும், நேற்று வெளியிடப்பட்ட ஜூன் மாதத்திற்கான பொதுப் பணவீக்க அறிவிப்பில், உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் மிகவும் அதிகரித்துள்ளது என்ற செய்தி வெளியானது. இதையடுத்து, முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.54.88 ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|