சில்லரை பணவீக்கம்10.02 சதவீதமாக குறைவுசில்லரை பணவீக்கம்10.02 சதவீதமாக குறைவு ... தங்கம் விலை குறைந்தது தங்கம் விலை குறைந்தது ...
சர்வதேச நிலவரத்திற்கு மாறாக... இந்தியாவில் அலுமினியம் உற்பத்தி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2012
00:22

சர்வதேச அளவில் அலுமினியம் விலை குறைந்துள்ளதால், பன்னாட்டு நிறுவனங்கள் அதன் உற்பத்தியை குறைத்துள்ளன. அதற்கு நேர்மாறாக, இந்திய நிறுவனங்கள், அலுமினிய உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சர்வதேச சந்தையில், வரும் மாதங்களில் அலுமினியம் அளிப்பு குறையும் என்பதால், அதன் விலை மீண்டும் உயரும் என்ற எதிர்பார்ப்பில், இந்திய நிறுவனங்கள், உற்பத்தியை குறைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய துறைகள்:உலக பொருளாதார நெருக்கடியால், அலுமினியத்திற்கான தேவை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் 4.20 கோடி டன் அலுமினியத்தில், வாகனம், கட்டுமானம், பேக்கேஜிங் உள்ளிட்ட துறை களின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது. இத்துறைகளின் மந்தநிலையால், அலுமினிய பயன்பாடு குறைந் துள்ளது.இதனால், சர்வதேச நிறுவனங்களிடம் அலுமினியம் கையிருப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து ஒரே சீரான உற்பத்தியில் ஈடுபட்டு, அலுமினியம் தேங்குவதை தவிர்க்கும் நோக்கில், சர்வதேச நிறுவனங்கள் அதன் உற்பத்தியை குறைத்துள்ளன.
பன்னாட்டு நிறுவனங்கள்:அல்கோ, ருசல், நார்ஸ்க் ஹைட்ரோ மற்றும் ரியோ டின்டோ போன்ற பன்னாட்டு நிறுவ னங்கள், ஒட்டுமொத்தமாக 18 லட்சம் டன் அளவிற்கு அலுமினியம் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளன. இந்நிறுவனங்களின் அலுமினிய உற்பத்தி செலவை விட, அதன் விற்பனை விலை குறைந்துள்ளது. இதுவும், அலுமினி யம் உற்பத்தியை குறைக்க முக்கிய காரணமாகும். சென்ற ஜூன் 21ம் தேதி நிலவரப்படி, லண்டன் உலோக முன்பேர சந்தையில், ஒரு டன் அலுமினியம் விலை 2,480 டாலராக இருந்தது. இது, தற்போது 26 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்து 1,850-1,910 டாலராக குறைந்துள்ளது.
உற்பத்தி செலவு:இந்திய நிறுவனங்களின் அலுமினிய உற்பத்தி செலவும், அதன் தற்போதைய விலையும் சமமாக இருப்பதால், அவை உற்பத்தியை குறைக்காமல் உள்ளன.அலுமினியம் விலை தற்போதுள்ளதை விட, மேலும் வீழ்ச்சி அடைந்தால், இந்திய நிறுவனங்கள் கூட, உற்பத்தியை குறைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய நிறுவனங்கள், ஒரு டன் அலுமினியத்தை உற்பத்தி செய்ய, சராசரியாக 2,030 டாலர் செலவிடுவதாக பார்க்லேஸ் நிறு வனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் நால்கோ, ஹிண்டால்கோ, பால்கோ ஆகிய நிறுவனங்களின் அலுமினிய உற்பத்தி செலவு, டன்னுக்கு முறையே 1,920 டாலர், 1,900 டாலர் மற்றும் 2,000 டாலராக உள்ளது.
வேதாந்தா:அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா அலுமினியம் நிறுவனத்தின், அலுமினிய உற்பத்தி செலவு, டன்னுக்கு 2,300-2,400 டாலராக உள்ளது. இந்நிறுவனம், வெளிச்சந்தையில் இருந்து பாக்சைட் மற்றும் அலுமினாவை பெற்று, அலுமினிய உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. மேலும், ஒடிசா மைனிங் நிறுவனம், லன்ஜிகர் சுரங்கத்தில் இருந்து எடுக்க உள்ள பாக்சைட்டை, நீண்ட கால அடிப்படையில் பெறுவதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
"நடப்பாண்டு இறுதிக்குள் பாக்சைட் பிரச்னை தீர்ந்துவிடும் என நம்புகிறோம். அதனால்,அலுமினிய உற்பத்தியை தற் போது குறைக்கும் திட்டமில்லை' என வேதாந்தா அலுமினியம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகேஷ் குமார் தெரிவித்தார்.
நால்கோ:நால்கோ நிறுவனத்திற்கு தேவையான நிலக்கரியை கோல் இந்தியா வழங்குவதாக தெரிவித்தது. இதனால், நால்கோ நிறுவனத்தின் உற்பத்தி செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மொத்த நிலக்கரி தேவையில் 60 சதவீதம் மட்டுமே அளிக்க முடியும் என, கோல் இந்தியா தெரிவித்து விட்டதால், நால்கோ நிறுவனத்தின் லாபவரம்பு, ஓரளவிற்கே இருக்கும்.
எனினும், சர்வதேச சந்தையில் அலுமினியம் அளிப்பு குறைந்துள்ளதால், அதன் விலை, அடுத்த 2-3 மாதங்களில் 10 சதவீதம் அதிகரித்து 2,000 டாலரை தாண்டும். அதனால் உற்பத்தியை குறைக்க வாய்ப் பில்லை' என, நால்கோ நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறினார்.சென்ற 2011-12ம் நிதியாண்டின், டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், இந்தியாவின் ஒட்டுமொத்த அலுமினிய உற்பத்தி, 12.40 லட்சம் டன்னாக இருந்தது. இது, முந்தைய 2010-11ம் முழு நிதியாண்டில் 16.30 லட்சம் டன்னாக இருந்தது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)