பதிவு செய்த நாள்
22 ஜூலை2012
11:51
விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை மூடைக்கு ரூ.125, உளுந்து ரூ.1600, கொண்டைக்கடலை ரூ.800 என, உயர்ந்துள்ளது. பருப்பு, பயறுகள் அனைத்தும் மூடைக்கு ரூ.500 முதல் ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. உற்பத்தி குறைவால் பொருட்கள் விலை, மேலும் உச்சத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளது.
மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடைக்கு ரூ.3300 லிருந்து 3425, உளுந்து ரூ. 4600 லிருந்து 6200, பர்மா உளுந்து ரூ.4100 லிருந்து 5700 , பொடி உளுந்து ரூ. 3600 லிருந்து ரூ.5100,உளுந்தம் பருப்பு ரூ.5800 லிருந்து 6200 , பர்மா உளுந்தம் பருப்பு ரூ.4750 லிருந்து 5700 , பொடி உளுந்தம்பருப்பு ரூ.4700 லிருந்து 5100 ,துவரை ரூ.4600 லிருந்து ரூ.5000 , பொடித் துவரை ரூ.3800 லிருந்து ரூ.4000, துவரம் பருப்பு ரூ. 6900 லிருந்தது ரூ.7200, பொடி துவரம் பருப்பு ரூ. 5200 லிருந்தது ரூ.6400 , பாசிப்பயறு நாடு ரூ.4400 லிருந்து 5100, லயன் பாசிப்பயறு ரூ.4600 லிருந்து ரூ.6500 , பாசிப் பருப்பு ரூ.5800, லிருந்து ரூ.6000, பொடிப் பாசிப் பருப்பு ரூ.5500 லிருந்து 5800 ,கொண்டைக் கடலை விலை ரூ.5200 லிருந்து 6000 , பொரி கடலை ரூ.3200 லிருந்து 4260 , மைதா ரூ.2460 லிருந்து 2540 , ரவை ரூ.2460 லிருந்து 2540 ஆக உயர்ந்துள்ளது.பாமாயில் டின்னுக்கு ரூ.1035 , கடைல எண்ணெய் ரூ.1850 , சூரியகாந்தி எண்ணெய் ரூ.1250 ,நிலக்கடலை பருப்பு ரூ.5400 , கடலை புண்ணாக்கு 3900 ஆக உள்ளது. சம்பா மிளகாய் வத்தல் குவிண்டாலுக்கு ரூ.3900 முதல் 4,300 ,சோடை வத்தல் 1400 லிருந்து 1500 ரூபாய் வரை விலை உள்ளது.
" உற்பத்தி குறைவால், தமிழகத்திற்கு சர்க்கரை ஒதுக்கீடு குறைந்ததால், இதன் விலை அதிகரித்துள்ளது. விற்பனை இல்லை என்றாலும், உற்பத்தி குறைவாலே அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருவதாக,' வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|