பதிவு செய்த நாள்
25 ஜூலை2012
23:57
புதுடில்லி:சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 11 சதவீதம் சரிவடைந்து, நாள் ஒன்றுக்கு, 11.50 கோடி கனமீட்டராக குறைந்துள்ளது.அதேசமயம், இயற்கை எரிவாயு விற்கான தேவை, நாள் ஒன்றுக்கு, 16.50 கோடி கனமீட்டராக உள்ளது. இறக்குமதி வாயிலாக, பற்றாக்குறை பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.
கெய்ரன் நிறுவனம்:ஓ.என்.ஜி.சி., கெய்ரன், மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் எண்ணெய் வயல்களில், எரிவாயு உற்பத்தி குறைந்து போயுள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின், கிருஷ்ணா, கோதவரி படுகையில் உள்ள 'டீ6'எண்ணெய் வயல்களில், சென்ற ஜூன் மாதத்தில்,எரிவாயு உற்பத்தி, 13.8 சதவீதம் குறைந் துள்ளது.உள்நாட்டில், கச்சா எண்ணெய் உற்பத்தியும், சென்ற ஜூன் மாதத்தில், 0.8 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக, மும்பை கடல் பகுதியில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகளில்,சென்ற ஜூன் மாதத்தில்,இதன் உற்பத்தி, 5.6 சதவீதம் சரிவடைந்து, 12.80 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
இதேபோன்று, கெய்ரன் நிறுவனத்தின், கச்சா எண்ணெய் உற்பத்தியும் சரிவடைந்துள்ளது. உள்நாட்டில், பொதுத் துறையைச் சேர்ந்த 18 நிறுவனங்கள், இரண்டு தனியார் துறை நிறுவனங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
எண்ணெய் சுத்திகரிப்பு:சென்ற ஜூன் மாதத்தில், இவற்றின் ஒட்டு மொத்த எண்ணெய் சுத்திகரிப்பு, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது.இதில், குறிப்பாக, எஸ்ஸார் ஆயில் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இரு நிறுவனங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு, 10.7 சதவீதம் உயர்ந்துள்ளது என, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|