பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
10:05
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 144.99 புள்ளிகள் அதிகரித்து 16984.18 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 43.50 புள்ளிகள் அதிகரித்து 5143.35 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான, வெள்ளிக்கிழமையன்று மிகவும் நன்கு இருந்தது. .பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதையடுத்து, "சென்செக்ஸ்' மற்றும் "நிப்டி' ஏற்றம் கண்டது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.20 ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|