பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
14:49
மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.5,600 கோடி முதலீட்டில் விமான பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.. விமானங்களை தயாரிக்க தேவையான தொழில்நுட்பங்களை சுயமாக உருவாக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ்ஏரோபேஸ் நிறுவனங்கள் இதனை மையமாகக் கொண்டு நாசிக்கில் இருந்து செயல்பட உள்ளது. இங்கு ராணுவம் மற்றும் பயணிகள் சேவை, ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றுக்கான இயந்திரங்கள், ராடார் கருவிகள் உள்ளிட்ட உதிரிபாகங்களை தயார் செய்ய் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டுள்ளது. போயிங் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி விவேக் லால்தான் இந்த நிறுவன்ங்களைத் தொடங்கி வைத்திருக்கிறார். சுமார் 1500 பேருக்கு இந்நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|