செயற்கை ரப்பர் உற்பத்தி 11சதவீதம் சரிவு செயற்கை ரப்பர் உற்பத்தி 11சதவீதம் சரிவு ... தொடர்ந்து சரிகிறது இந்திய ஏற்றுமதி தொடர்ந்து சரிகிறது இந்திய ஏற்றுமதி ...
விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் டீசல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2012
10:29

புதுடில்லி : வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, 1,900 கோடி ரூபாய் மதிப்பிலான, நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பயிர்களை காக்கும் வகையில், விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் டீசல் வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வழக்கத்துக்கும் மாறாக, இந்த ஆண்டு பருவமழை, சரிவர பெய்யாததால், பல மாநிலங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, மத்திய விவசாய அமைச்சர் சரத்பவாரை தலைவராகக் கொண்டு செயல்படும், வறட்சி தொடர்பான, அமைச்சர்கள் அடங்கிய அதிகார குழுவின் கூட்டம் நேற்று நேற்று நடைபெற்றது. இதில், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, 50 சதவீத மானிய விலையில் டீசல் வழங்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், டீசலுக்கு வழங்கப்படும் 50 சதவீத மானியத்தை, மத்திய அரசும், மாநில அரசும் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ளும்.
இது குறித்து சரத்பவார் மேலும் கூறியதாவது: பருவமழை பொய்த்ததால், 306 மாவட்டங்களில் குறைவாகவும், 94 மாவட்டங்களில் மிகக் குறைவாகவும் மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, பயிரிடப்பட்ட பகுதிகளும் குறைந்து போய்விட்டன. இதன் காரணமாக, காரீப் பருவ பயிர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சரத்பவார் கூறினார்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)