பதிவு செய்த நாள்
02 ஆக2012
10:40
புதுடில்லி: எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருளின் விலையை, கிலோ லிட்டருக்கு, 4.5 சதவீதம் உயர்த்தியுள்ளன. கடந்த ஒரு மாதத்தில், இரண்டாவது முறையாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், விமானங்களுக்கான எரிபொருளை வினியோகித்து வருகின்றன. கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சர்வதேச சந்தையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 147 டாலராக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, அம்மாதத்தில், விமான எரிபொருளின் விலை முன் எப்போதும் இல்லாத அளவாக, கிலோ லிட்டர், 71,028.26 ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, சென்ற ஜூலை மாத தொடக்கத்தில் தான், கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவாக, விமான எரிபொருளின் விலை, 61,169.08 ஆக மிகவும் குறைந்திருந்தது. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், புதுடில்லியில், விமான எரிபொருளின் விலையை கிலோ லிட்டருக்கு (1,000 லிட்டர்), 2,797.41 ரூபாய் அதிகரித்து (4.5 சதவீதம்), 65,005.59 ஆக நிர்ணயம் செய்துள்ளது. மும்பையில் இதன்விலை, 63,002.45 ரூபாயிலிருந்து, 65,884.34 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது..
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|