பதிவு செய்த நாள்
06 ஆக2012
23:41
புதுடில்லி: நடப்பு கரீப் பருவத்தில் (ஜூலை - அக்.,), நிலக்கடலை உற்பத்தி, முந்தைய பருவத்தை விட, 11 லட்சம் டன் குறையும் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.இந்தியாவில், குஜராத், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில், மிகவும் அதிகளவில் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. பருவம் தவறிய மற்றும் குறைவான மழை பொழிவால், நடப்பு பருவத்தில், இதன் உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரீப் பருவத்தின், மொத்த நிலக்கடலை உற்பத்தியில், மூன்றில் ஒரு பங்கு, குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியின் பங்களிப்பாக உள்ளது. நடப்பு கரீப் பருவத்தில், இப்பகுதி விவசாயிகள் நிலக்கடலையை தாமதமாக பயிரிட்டனர். மழை குறைவால், ஒட்டுமொத்த அளவில், நிலக்கடலை உற்பத்தி சரிவடையும் என தெரிகிறது.நடப்பு கரீப் பருவத்தில், மேற்கண்ட மாநிலங்களில், 36.53 லட்சம் ஹெக்டேரில், நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இது, முந்தைய பருவத்தை விட, (42.98 லட்சம் ஹெக்டேர்) 15 சதவீதம் குறைவாகும்.இதனால், ஒட்டுமொத்த நிலக்கடலை உற்பத்தி, 22 சதவீதம் குறைந்து, 51 லட்சம் டன்னிலிருந்து, 40 லட்சம் டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|