பதிவு செய்த நாள்
12 ஆக2012
00:15
புதுடில்லி:இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த மதிப்பீட்டை மூடீஸ் நிறுவனம் குறைத்திருப்பது கவலை அளிக்கிறது. இருப்பினும், நாட்டின் அடிப்படை பொருளாதாரம் வலுவாகவே உள்ளது என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.அண்மையில், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதமாகத்தான் இருக்கும் என, மூடீஸ் நிறுவனம் அறிவித்தது.
மேலும், வரும் 2013-14ம் நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறையும் என, மறுமதிப்பீடு செய்துள்ளது.சர்வதேச அளவில் ஸ்திரத்தன்மையற்ற நிலை காணப்படுகிறது. ஆனால், மத்திய அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ மிகச் சிறிய அளவிலேயே கொள்கை முடிவுகளை எடுத்துள்ளன. அதனால், சரிவில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என, மூடிஸின் மூத்த பொருளாதார ஆய்வாளர் கிளென் லெவின் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பிரதமர் கூறியதாவது: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. எனினும், தேவையற்ற முடிவுகளுக்கு ஒருவர் வரக்கூடாது. இந்திய பொருளாதாரத்திற்கான அடிப்படை காரணிகள் வலுவாக உள்ளன. உலகிலேயே, இந்தியாவில்தான் முதலீடுகளும், சேமிப்பும் அதிகமாக உள்ளன. கடந்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், இதற்கும் மேலான வளர்ச்சி எட்டப்படும் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|