பதிவு செய்த நாள்
13 ஆக2012
23:41
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், முன்பேர சந்தைகளின் விற்றுமுதல் 56.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தை விட (53.11 லட்சம் கோடி ரூபாய்), 7 சதவீதம் அதிகம் என, பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.) தெரிவித்துள்ளது.வேளாண் பொருட்கள்தேசிய அளவில், ஐந்து முன்பேர சந்தைகளும், மண்டல அளவில், 16 சந்தைகளும் உள்ளன. இச்சந்தைகளில், தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், உலோகம், வேளாண் விளை பொருட்கள் உள்ளிட்டவற்றின் மீது வர்த்தகம் நடைபெறுகிறது.கணக்கீட்டு காலத்தில், எரிபொருட்கள் மீதான வர்த்தகம், 42 சதவீதம் அதிகரித்து, 8.25 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 11.75 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. வேளாண் விளை பொருட்கள் மீதான வர்த்தகம், 30 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5.89 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 7.69 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துஉள்ளது.தங்கம்தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 26 சதவீதம் உயர்ந்து, 8.38 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 10.59 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், தங்கம், வெள்ளி ஆகிய மதிப்புமிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், 13 சதவீதம் சரிவடைந்து, 30.57 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 26.61 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|