பதிவு செய்த நாள்
16 ஆக2012
10:43
புதுடில்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி.), கடந்த நிதியாண்டில் காணப்பட்ட 6.5 சதவீதத்தை விட, நடப்பு 2012-13ம் நிதியாண்டில் அதிகரிக்கும் என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் கூறுகையில், "கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருந்தது. இது,நடப்பு நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று தெரிவித்தார். நடப்பாண்டில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய தாக்கம் நம் நாட்டையும் பாதித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இவ்வாண்டு போதுமான பருவமழை இல்லாததால், அது கடினமானதாக உள்ளது என, பிரதமர் மேலும் கூறினார்.
கிரிசில், மூடீஸ் போன்ற சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 5.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, பிரதமர் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|