பருப்பு வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதுபருப்பு வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டது ... மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதத்தை தாண்டும்: பிரதமர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதத்தை தாண்டும்: பிரதமர் ...
சரக்கு கையாள்வது குறைந்ததுமந்தகதியில் நாட்டின் முக்கிய துறைமுகங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2012
02:27

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டின் முக்கிய துறைமுகங்கள் சரக்கு கையாண்டது குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி குறைந்ததையடுத்து, முக்கிய துறைமுகங்களின் செயல்பாடுகள் மந்தமடைந்துள்ளன. இந்த நிலையிலும், ஒரு சில முக்கிய துறைமுகங்கள் சரக்கு கையாண்டதில் வளர்ச்சி கண்டுள்ளன. மதிப்பீட்டு காலத்தில், இத்துறைமுகங்கள், 18.37 கோடி டன் சரக்கு கையாண்டுள்ளன. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் கையாண்டதை (19.31 கோடி டன்) விட, 4.89 சதவீதம் குறைவு என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா:அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்நாடுகளை சார்ந்துள்ள இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது. நாட்டின் இறக்குமதியும் சுணக்கம் கண்டுள்ளதால், முக்கிய துறைமுகங்களில், கையாளப்படும் சரக்கின் அளவு குறைந்து போயுள்ளது.கணக்கீட்டு காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தை விட, 5.3 சதவீதம் குறைந்து, 9,760 கோடி டாலராகவும், இறக்குமதி, 6.47 சதவீதம் சரிவடைந்து, 15,320 கோடி டாலராகவும் சரிவடைந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், அனல் மின் நிலையங்களுக்காக, துறைமுகங்கள் நிலக்கரியை கையாண்டது, 4.44 சதவீதம் அதிகரித்துள்ளது.சென்ற ஏப்., - ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள மும்பை ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் (ஜே.என்.போர்ட்), கொச்சி மற்றும் கண்ட்லா துறைமுகங்கள், சிறப்பான அளவில் சரக்கை கையாண்டுள்ளன.
அதே சமயம், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரும்பாலான துறைமுகங்கள், இரும்புத்தாது, கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை அதிகம் சார்ந்துள்ளதால், அவை கையாளும் சரக்கின் அளவு குறைந்து போயுள்ளது.நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாத காலத்தில், கோல்கட்டா துறைமுகம் (ஹால்டியா உட்பட), 1.35 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், கையாண்ட அளவை விட(1.58 கோடி டன்),14.24 சதவீதம் குறைவாகும்.மதிப்பீட்டு காலத்தில், பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 18.52 சதவீதம் குறைந்து,1.99 கோடி டன்னி லிருந்து, 1.62 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு,14.87 சதவீதம் குறைந்து, 2.42 கோடி டன்னிலிருந்து, 2 கோடி டன்னாக சரிவடைந்து போயுள்ளது.
எண்ணூர் துறைமுகம்:அதேசமயம், தமிழகத்தை சேர்ந்த எண்ணூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 28 சதவீதம் வளர்ச்சி கண்டு, 42.36 லட்சம் டன்னிலிருந்து, 54.22 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு, 0.78 சதவீதம் உயர்ந்து, 94.62 லட்சம் டன்னிலிருந்து, 95.36 லட்சம் டன்னாக சற்று உயர்ந்துள்ளது.இருப்பினும், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 8.78 சதவீதம் குறைந்து, 2 கோடி டன்னிலிருந்து, 1.84 கோடி டன்னாக குறைந்து போயுள்ளது.கொச்சி துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு, 8.50 சதவீதம் உயர்ந்து, 63.79 லட்சம் டன்னிலிருந்து, 69.21 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
நியூ மங்களூர் துறைமுகம்:நியூ மங்களூர் துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு, 2.31 சதவீதம் குறைந்து, 1.15 கோடி டன்னி லிருந்து, 1.12 கோடி டன்னாகவும்,மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 22.01 சதவீதம் வீழ்ச்சிகண்டு,1.36 கோடி டன்னிலிருந்து,1.06 கோடி டன்னாகவும் குறைந்து போயுள்ளது.அதேசமயம், ஜவர்ஹலால் நேரு போர்ட் டிரஸ்ட் கையாண்ட சரக்கின் அளவு, 2.90 சதவீதம் உயர்ந்து, 2.16 கோடி டன்னிலிருந்து, 2.22 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 3.54 சதவீதம் உயர்ந்து, 2.82 கோடி டன்னிலிருந்து, 2.92 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
போட்டி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, 13.85 கோடி டன் என்றளவில் இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் கையாளப்பட்ட சரக்கை விட, 5.49 சதவீதம் குறைவாகும்.தற்போது, சரக்கு கையாளுவதில், பெரிய துறைமுகங்களுக்கு போட்டியாக, சிறிய துறைமுகங் கள் உருவெடுத்து வருகின்றன.இதனால், வரும் காலங்களில், இத்துறைமுகங்கள் கையாளும் சரக்கின் அளவு சிறப்பாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)