பதிவு செய்த நாள்
16 ஆக2012
10:50
மும்பை: இந்திய நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள், உரிமை பங்குகள் வாயிலாக, சென்ற ஜூன் மாதம், 63 கோடி ரூபாய் அளவிற்கே நிதி திரட்டியுள்ளன. இது, முந்தைய ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு மிக குறைவான தொகையாகும். சென்ற ஜூன் மாதம், இரண்டு நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டன. இவற்றில், வி.கே.எஸ் புராஜக்ட்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 55 கோடி ரூபாயும், மற்றொரு நிறுவனம், எட்டு கோடி ரூபாயும் திரட்டியுள்ளன.
கடந்த பிப்ரவரியில் புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 792 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. சென்ற மே மாதம், பல்வேறு நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 188 கோடி ரூபாயும், உரிமை பங்கு வெளியீடுகள் மூலம், 58 கோடி ரூபாயும் திரட்டிக் கொண்டன. நடப்பு நிதியாண்டில், சென்ற ஜூன் வரை, ஏழு நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் மூலம், மொத்தம், 509 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில், 18 பங்கு வெளியீடுகள் வாயிலாக, 8,000 கோடி ரூபாய் திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|