பதிவு செய்த நாள்
20 ஆக2012
01:54
புதுடில்லி:கொத்தவரைக்கு, வெளிநாடுகளில் தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் மத்திய பிரேதேசம் மாநிலங்களில், கொத்தவரை சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்துள்ளது.ராஜஸ்தான்:குறிப்பாக, ராஜஸ்தானில், நடப்பு வேளாண் பருவத்தில், இதன் சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டை விட, 1.5 மடங்கு அதிகரித்து, 45 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், நடப்பு சந்தையில், ஒரு குவிண்டால் கொத்தவரை, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இது, கடந்த ஆண்டு மே மாதத்தில், 30 ஆயிரம் ரூபாய் என்றளவில் விலை போனது.
தேவை அதிகரித்து, இதன் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுவதால், முன்பேர சந்தைகளில், கொத்தவரை வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா, பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில், உள்ள விவசாயிகள், பருத்திக்கு பதிலாக, கொத்தவரை சாகுபடியில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
நாட்டின் மொத்த கொத்தவரை உற்பத்தியில், ராஜஸ்தான் மாநிலம், 70 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில், நடப்பு பருவத்தில், மழை பொழிவு குறைவாக இருந்தது. தற்போது, மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்துள்ளதையடுத்து, இதன் சாகுபடி பரப்பளவு உயர்ந்துள்ளது. கொத்தவரையிலிருந்து எடுக்கப்படும் பசை, ஐஸ்கிரீம், சூப் (ரசம்), பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றில், கெட்டித் தன்மைக்காக பயன்படுத்தப்படுகிறது. கொத்தவரை பசை, காகிதம், ஜவுளி போன்ற தொழில் துறைகளிலும் ஒரளவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகள்:அமெரிக்கா, கனடா, பிரேசில், அர்ஜெண்டினா, சீனா போன்ற நாடுகளில், கொத்தவரை, இயற்கை எரிவாயு, துரப்பண பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது, துரப்பணப் பணியின் போது, இலகுவாக துளையிட உதவுகிறது. இதனால், மேற்கண்ட நாடுகள், இதை, அதிகளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. இது போன்ற காரணங்களால் உள்நாட்டில், கொத்தவரை சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|