"ஈமு' நிறுவனங்கள் மீது  கோவையில் புகார்கள் குவிகின்றன "ஈமு' நிறுவனங்கள் மீது கோவையில் புகார்கள் குவிகின்றன ... உணவு தானிய உற்பத்தியை உயர்த்த திட்டம் உணவு தானிய உற்பத்தியை உயர்த்த திட்டம் ...
தேவை உயர்வால் கொத்தவரை சாகுபடி பரப்பளவு உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2012
01:54

புதுடில்லி:கொத்தவரைக்கு, வெளிநாடுகளில் தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் மத்திய பிரேதேசம் மாநிலங்களில், கொத்தவரை சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்துள்ளது.ராஜஸ்தான்:குறிப்பாக, ராஜஸ்தானில், நடப்பு வேளாண் பருவத்தில், இதன் சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டை விட, 1.5 மடங்கு அதிகரித்து, 45 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், நடப்பு சந்தையில், ஒரு குவிண்டால் கொத்தவரை, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இது, கடந்த ஆண்டு மே மாதத்தில், 30 ஆயிரம் ரூபாய் என்றளவில் விலை போனது.
தேவை அதிகரித்து, இதன் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுவதால், முன்பேர சந்தைகளில், கொத்தவரை வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா, பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில், உள்ள விவசாயிகள், பருத்திக்கு பதிலாக, கொத்தவரை சாகுபடியில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
நாட்டின் மொத்த கொத்தவரை உற்பத்தியில், ராஜஸ்தான் மாநிலம், 70 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில், நடப்பு பருவத்தில், மழை பொழிவு குறைவாக இருந்தது. தற்போது, மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்துள்ளதையடுத்து, இதன் சாகுபடி பரப்பளவு உயர்ந்துள்ளது. கொத்தவரையிலிருந்து எடுக்கப்படும் பசை, ஐஸ்கிரீம், சூப் (ரசம்), பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றில், கெட்டித் தன்மைக்காக பயன்படுத்தப்படுகிறது. கொத்தவரை பசை, காகிதம், ஜவுளி போன்ற தொழில் துறைகளிலும் ஒரளவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகள்:அமெரிக்கா, கனடா, பிரேசில், அர்ஜெண்டினா, சீனா போன்ற நாடுகளில், கொத்தவரை, இயற்கை எரிவாயு, துரப்பண பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது, துரப்பணப் பணியின் போது, இலகுவாக துளையிட உதவுகிறது. இதனால், மேற்கண்ட நாடுகள், இதை, அதிகளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. இது போன்ற காரணங்களால் உள்நாட்டில், கொத்தவரை சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)