கம்ப்யூட்டர் விற்பனை 28.60 லட்சமாக வளர்ச்சி கம்ப்யூட்டர் விற்பனை 28.60 லட்சமாக வளர்ச்சி ... மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளுக்குரூ.1.19 கோடியில் குளு குளு வசதி மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளுக்குரூ.1.19 கோடியில் குளு குளு வசதி ...
உற்பத்தியை விஞ்சிய பயன்பாட்டால்...இயற்கை ரப்பர் இறக்குமதி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2012
23:46

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -உள்நாட்டில் இயற்கை ரப்பர் உற்பத்தியை விட, அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் இயற்கை ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது.சென்ற ஏப்ரல் - ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 0.5 சதவீதம் குறைந்து 2.39 லட்சம் டன்னாக உள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதங்களில் 2.40 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது. அதே சமயம், இதே மாதங்களில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 3.24 லட்சம் டன்னில் இருந்து 3.30 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடுகள்நடப்பாண்டு, ஜூலை மாதத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 2.6 சதவீதம் அதிகரித்து, 66 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில் 64,300 டன்னாக இருந்தது.இதே மாதங்களில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 82,500 டன்னில் இருந்து, 83 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. ஆக, இம்மாதத்தில் இயற்கை ரப்பருக்கான பற்றாக்குறை 17 ஆயிரம் டன்னாக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து, 76,666 டன் இயற்கை ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் 60,461 டன்னாக இருந்தது.கடந்த 10 ஆண்டுகளாக, முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு விரிவாக்கத் திட்டங்களை மேற்கொண்டதும், புதிய டயர் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டுள்ளதும், உள்நாட்டில், இயற்கை ரப்பர் பயன்பாடு அதிகரிக்க துணை புரிந்துள்ளன.மந்தமான வளர்ச்சிரப்பர் தோட்டங்களின் பரப்பளவு வளர்ச்சி, மந்தகதியில் உள்ளதாலும், இயற்கை ரப்பர் உற்பத்தி, பயன்பாட்டிற்கு ஏற்ப, அதிகரிக்காமல் உள்ளது. இயற்கை ரப்பர் தட்டுப்பாட்டை சமாளிக்க, அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம், இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள ரப்பர் தோட்டங்களை குத்தகைக்கு பெற திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனம், அதன் டயர் தயாரிப்பை முழுவீச்சில் மேற்கொள்ள உள்ளது. இயற்கை ரப்பருக்கான தேவை அதிகரித்து வருவதற்கேற்ப, அதன் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இத்துறையினர் தெரிவித்தனர்.வரும் 2015-16ம் நிதியாண்டில், நாட்டின் இயற்கை ரப்பருக்கான தேவை, 15 லட்சம் டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதே காலத்தில், இந்தியாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி 11 -12 லட்சம் டன் என்ற அளவிற்கே அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.கையிருப்புஇந்நிலையில், இயற்கை ரப்பர் கையிருப்பு போதுமான அளவிற்கு உள்ளதால், வரும் காலத்தில் பெரிய அளவில் பற்றாக்குறை பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.தற்போது, நாட்டின் இயற்கை ரப்பர் கையிருப்பு 2.16 லட்சம் டன்னாக இருக்கும் என, ரப்பர் வாரியம் மதிப்பிட்டுள்ளது. ஆனால், இதை இத்துறையை சேர்ந்தவர்கள் மறுத்துள்ளனர். விளைபொருள் சந்தையில், விற்பனைக்கான இயற்கை ரப்பர், ஒரு லட்சம் டன் அளவிற்கே இருக்கும் என்றும், இது, ஒரு மாத தேவையை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிய அளவாகும் என, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.டயர் நிறுவனங்கள்டயர் தயாரிப்பில், குறிப்பாக "ரேடியல்' டயர்களை தயாரிக்க, வெளிநாடுகளில் உற்பத்தியாகும் இயற்கை ரப்பர் பொருத்தமாக உள்ளது. இதனால், டயர் தயாரிப்பு நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் தற்போது விலை குறைவாக உள்ள இயற்கை ரப்பரை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றன. சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியா 2.05 லட்சம் டன் இயற்கை ரப்பரை இறக்குமதி செய்தது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 1.88 லட்சம் டன்னாக இருந்தது. தற்போது, இயற்கை ரப்பருக்கான தேவை பெருகி வரும் நிலையில், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், அதன் இறக்குமதி 2.50 லட்சம் டன்னை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)