"கெயில்' குழாய் பதிக்கும் பணி: விவசாயிகளுக்கு இழப்பீடு"கெயில்' குழாய் பதிக்கும் பணி: விவசாயிகளுக்கு இழப்பீடு ... தங்கம் விலை விர்ர்ர்... சவரனுக்கு ரூ.288 உயர்ந்தது தங்கம் விலை விர்ர்ர்... சவரனுக்கு ரூ.288 உயர்ந்தது ...
ரசாயன கலப்பு இல்லாத...இயற்கை உணவு பொருட்கள் சந்தை ரூ.1,000 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2012
01:30

புதுடில்லி:இந்தியாவில், ரசாயன கலப்பற்ற இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் உணவு வகைகளின் சந்தை, ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஏற்றுமதியை உள்ளடக்கிய இச்சந்தை மதிப்பு, தற்போது 1,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
விழிப்புணர்வு:இதற்கு,நடுத்தர வர்க்கத்தினரின் செலவிடும் வருவாய் அதிகரித்து வருவதும், ரசாயன கலப்பற்ற உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு பெருகி வருவதும் முக்கிய காரணங்களாகும்.இவ்வகை உணவுச் சந்தை குறித்து யெஸ் பேங்க் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்:கடந்த 2010ம் ஆண்டு நிலவரப்படி, ரசாயன கலப்பற்ற உணவுகள் மற்றும் குளிர்பானங்களின் சர்வதேச சந்தை மதிப்பு, 5,720 கோடி டாலராக இருந்தது.
இது, ஆண்டுக்கு 16.2 சதவீத வளர்ச்சியின் அடிப்படையில், வரும் 2015ம் ஆண்டு 10,450 கோடி டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐரோப்பிய நாடுகள்:மதிப்பீட்டு ஆண்டில், ரசாயன கலப்பற்ற உணவு வகைகளுக்கான சர்வதேச சந்தையில், ஐரோப்பிய நாடுகள் 2,780 கோடி டாலர் பங்களிப்புடன் முதலிடத்தை பிடித்திருந்தன. ஆசிய, பசிபிக் நாடுகளின் பங்களிப்பு, 350 கோடி டாலராக இருந்தது. இந்நாடுகள், இச்சந்தையில், 2006-10ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு சராசரியாக, 16.2 சதவீத வளர்ச்சியை கண்டு வந்துள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை, தற்போது, ஏற்றுமதியை உள்ளடக்கிய, ரசாயன கலப்பற்ற, இயற்கை உணவு வகைகளின் சந்தை, 1,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. நம்நாடு, ஆண்டுக்கு 39 லட்சம் டன் அளவிற்கு, அங்கீகரிக்கப்பட்ட ரசாயன கலப்பற்ற இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்படும், விளைபொருட்களை உற்பத்தி செய்கிறது. இவற்றில், பாசுமதி அரிசி, பருப்பு வகைகள், தேயிலை, காபி, நறுமணப் பொருட்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவை அடங்கும்.ரசாயன கலப்பற்ற உணவுத் தொழில், பெருநகரங்களை சார்ந்தே உள்ளது.
சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட, 10 பெருநகரங்களில், மிக அதிகளவில் இயற்கை உணவு வகைகள் கிடைக்கின்றன.மத்திய அரசின் புள்ளி விவரப்படி, நாட்டில், 11 லட்சம் ஹெக்டேரில், இயற்கை உரங்கள் வாயிலான விவசாயம் நடைபெறுகிறது. இது தவிர, 34 லட்சம் ஹெக்டேர் அளவிலான வனப் பகுதிகளிலும், இவ்வகை உணவுப் பொருட்கள் சாகுபடி செய்யப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பருத்தி:இயற்கை வேளாண்மையில், மத்திய பிரதேசம் 4.40 லட்சம் ஹெக்டேருடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா (1.50 லட்சம் ஹெக்டேர்), ஒடிசா (95 ஆயிரம் ஹெக்டேர்) உள்ளன.இந்தியாவில் இயற்கை வேளாண் சாகுபடி பரப்பில், பருத்தி 40 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அளவில், இவ்வகையான பருத்தி உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு 50 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)