சர்வதேச உருக்கு உற்பத்தி 13 கோடி டன்சர்வதேச உருக்கு உற்பத்தி 13 கோடி டன் ... ரசாயன கலப்பு இல்லாத...இயற்கை உணவு பொருட்கள் சந்தை ரூ.1,000 கோடியாக உயர்வு ரசாயன கலப்பு இல்லாத...இயற்கை உணவு பொருட்கள் சந்தை ரூ.1,000 கோடியாக உயர்வு ...
"கெயில்' குழாய் பதிக்கும் பணி: விவசாயிகளுக்கு இழப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2012
01:28

ஈரோடு:எரிவாயு எடுத்துச் செல்வதற்கான குழாய் அமைக்கும் பணியால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கத் தயாராக உள்ளதாக, "கெயில்' என்று சுருக்கமாக அழைக்கப்படும், காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.தமிழகம்:"கெயில்' நிறுவனம் சார்பில், பெங்களூரில் இருந்து பஞ்சாப் மாநிலம் வரை, 30 ஆயிரம் கிலோ மீட்டருக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் இன்னும் குழாய் பதிக்கப்படவில்லை.இதற்கிடையில், கொச்சி துறைமுகத்தில் இருந்து, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு குழாய் பதிக்கும் பணி, விரைவில் துவங்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 38 கி.மீ., தூரம் குழாய் அமைக்கப்படும். இரண்டு அடி அகலம் கொண்ட குழாய் பதிப்பதால், அதை மையமாகக் கொண்டு, 20 மீட்டருக்கான இடத்தை, "கெயில்' நிறுவனம் கையகப்படுத்தும்.
தனியார் நிலத்துக்கு, புதிய நில வழிகாட்டி மதிப்பீட்டில் உள்ள தொகை மற்றும் கூடுதலாக 10 சதவீதத் தொகை, உரிமையாளருக்கு வழங்கப்படும்.மரம் நடுதல்;இருப்பினும், அவ்விடத்தை அந்நபர் சாதாரணமாக பயன்படுத்தலாம். பைப் லைன் மீது கட்டடம் கட்டுதல், மரம் நடுதல் போன்றவை மேற்கொள்ளக்கூடாது. ஈரோடு மாவட்டத்தில், 368 விவசாயிகளிடம் இருந்து, 96 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
இது பற்றி ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம், விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகை, தயாராக உள்ளது. விரைவில் வருவாய்த் துறை, கெயில் நிறுவனம், போலீசார் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களுக்கான தொகை வழங்கப்படும்.விவசாய நிலம் பாதிக்கப்படும் என்பதால், சாலை, ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய பாதையில் குழாயை கொண்டு செல்ல வேண்டும் என, சில விவசாய அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், தேசிய அளவில் எந்த பாதையில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டதோ, அதே பாதையில் கொண்டு செல்லப்படும் என, "கெயில்' நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)