பதிவு செய்த நாள்
25 ஆக2012
23:51
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 17ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்,26 கோடி டாலர் (1,430 கோடி ரூபாய்) குறைந்து, 28,891 கோடி டாலராக (15,89,005 கோடிரூபாய்) சரி வடைந்துள்ளது. இது, முந்தைய 10ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 28,917 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வாரங்களில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 27 கோடி டாலர் சரிவடைந்து, 25,692 கோடி டாலராக உள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தில் எவ்வித மாற்றமும் இன்றி, 2,571 கோடி டாலர் என்ற அள விலும், எஸ்.டீ.ஆர். மதிப்பு, 435 கோடி டாலர் என்ற அளவிலும் உள்ளன.சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 1 கோடி டாலர் உயர்ந்து, 219 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|