பதிவு செய்த நாள்
27 ஆக2012
00:54
ஈரோடு:இஞ்சி வரத்து குறைந்துள்ள நிலையில், தேவை அதிகரித்துள்ளதால் இதன் விலை கிலோவுக்கு, 20 முதல் 45 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.நடப்பாண்டு, பெய்த கோடை மழையால், இஞ்சி உற்பத்தி கடுமையாக பாதித்து, அதன் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. ஊறுகாய் தயாரிப்பில் இஞ்சி பயன்பாடு அதிகம் உள்ளதால் விலையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.சில மாதங்களுக்கு முன், 55 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை இஞ்சியின் விலை, 1,375 ரூபாயாக இருந்தது.
இது, தற்போது 3,850 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஊறுகாய்க்கு பயன்படும் மா இஞ்சி, 3,300 ரூபாயில் இருந்து, 4,400 ரூபாயாக அதிகரித்துஉள்ளது.ஈரோடு, இஞ்சி கமிஷன் மண்டி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:நடப்பாண்டு கோடையில் பெய்த பலத்த மழையால் உற்பத்தி பாதித்தது. தென்மேற்கு பருவமழையால், இஞ்சி சாகுபடி பரப்பையும் விவசாயிகள் குறைத்தனர். இதனால், மண்டிகளுக்கு வரத்தும் கணிசமாக குறைந்து விட்டது.கறிமசாலாவுக்கும், ஊறுகாய் தயாரிக்கவும் இஞ்சி அதிகமாக பயன்படுகிறது. தவிர, சித்தா மற்றும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தேவை அதிகரித்துள்ளதால், இஞ்சி விலை உயர்ந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|