தொலைபேசி பயன்படுத்தும் 96.55 கோடி சந்தாதாரர்கள்தொலைபேசி பயன்படுத்தும் 96.55 கோடி சந்தாதாரர்கள் ... உற்பத்தி குறைவால் 3 கோடி டன் யூரியா இறக்குமதி உற்பத்தி குறைவால் 3 கோடி டன் யூரியா இறக்குமதி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தைவான் தர்ப்பூசணிக்கு அதிக வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2012
23:40

சேலம்: சேலத்தில் கிடைக்கும், தைவான் நாட்டு தர்ப்பூசணி பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.கோடை காலத்தில், தர்ப்பூசணி பழங்களை பலரும் விரும்பி சாப்பிடுவர். திண்டிவனம், விழுப்புரம், பெங்களூரு, சேலம் ஆகிய பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தர்ப்பூசணி பழங்கள், தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.தற்போது, உள்நாட்டு தர்ப்பூசணி பழங்கள் சீசன் முடிந்து விட்டது. ஒரு சில இடங்களில் மட்டுமே தர்ப்பூசணி பழங்கள் வரத்தாகின்றன. ஆனால், தைவான் தர்ப்பூசணி பழங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன.இது குறித்து, சேலம், சத்திரத்தில் பழ கமிஷன் மண்டி நடத்தி வரும் காவேரி கவுண்டர், சிவகுமார், குமரவேல் ஆகியோர் கூறியதாவது:நீர்ச்சத்து உள்ள அந்த பழத்தை, சர்க்கரை நோயாளிகள் தைரியமாக சாப்பிடலாம். எந்த பாதிப்பும் வராது. தர்ப்பூசணி பழங்களின் வரத்து முடிந்து விட்டதால், தைவான் தர்ப்பூசணி பழங்களின் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.தைவான் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள தர்ப்பூசணி விதைகளை, தமிழகம் முழுவதும் விவசாயிகள் பரவலாக பயிரிட்டுள்ளனர். தைவான் தர்ப்பூசணி பழங்கள், ஆண்டுதோறும் தங்கு தடையின்றி கிடக்கும் வகையில், சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது, வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், விற்பனை அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை, திண்டிவனம், மொரப்பூர், பொம்முடி ஆகிய இடங்களில் விளைந்துள்ள தைவான் தர்ப்பூசணி பழங்கள், தினமும் இரண்டு முதல் மூன்று டன் பழங்கள் வரத்தாகின்றன.ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு, நாங்கள் விற்பனை செய்கிறோம். இதை சில்லறை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக, தள்ளுவண்டிகளில் பழங்களை விற்பனை செய்வோர் அதிகமுள்ளனர். ஒருசில பழங்கள் மூன்று கிலோ எடை வரை உள்ளன. உடலுக்கு தெம்பு தரும் தைவான் தர்ப்பூசணி பழங்களை, யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)