பதிவு செய்த நாள்
27 ஆக2012
23:40
சேலம்: சேலத்தில் கிடைக்கும், தைவான் நாட்டு தர்ப்பூசணி பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.கோடை காலத்தில், தர்ப்பூசணி பழங்களை பலரும் விரும்பி சாப்பிடுவர். திண்டிவனம், விழுப்புரம், பெங்களூரு, சேலம் ஆகிய பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தர்ப்பூசணி பழங்கள், தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.தற்போது, உள்நாட்டு தர்ப்பூசணி பழங்கள் சீசன் முடிந்து விட்டது. ஒரு சில இடங்களில் மட்டுமே தர்ப்பூசணி பழங்கள் வரத்தாகின்றன. ஆனால், தைவான் தர்ப்பூசணி பழங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன.இது குறித்து, சேலம், சத்திரத்தில் பழ கமிஷன் மண்டி நடத்தி வரும் காவேரி கவுண்டர், சிவகுமார், குமரவேல் ஆகியோர் கூறியதாவது:நீர்ச்சத்து உள்ள அந்த பழத்தை, சர்க்கரை நோயாளிகள் தைரியமாக சாப்பிடலாம். எந்த பாதிப்பும் வராது. தர்ப்பூசணி பழங்களின் வரத்து முடிந்து விட்டதால், தைவான் தர்ப்பூசணி பழங்களின் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.தைவான் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள தர்ப்பூசணி விதைகளை, தமிழகம் முழுவதும் விவசாயிகள் பரவலாக பயிரிட்டுள்ளனர். தைவான் தர்ப்பூசணி பழங்கள், ஆண்டுதோறும் தங்கு தடையின்றி கிடக்கும் வகையில், சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது, வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், விற்பனை அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை, திண்டிவனம், மொரப்பூர், பொம்முடி ஆகிய இடங்களில் விளைந்துள்ள தைவான் தர்ப்பூசணி பழங்கள், தினமும் இரண்டு முதல் மூன்று டன் பழங்கள் வரத்தாகின்றன.ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு, நாங்கள் விற்பனை செய்கிறோம். இதை சில்லறை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக, தள்ளுவண்டிகளில் பழங்களை விற்பனை செய்வோர் அதிகமுள்ளனர். ஒருசில பழங்கள் மூன்று கிலோ எடை வரை உள்ளன. உடலுக்கு தெம்பு தரும் தைவான் தர்ப்பூசணி பழங்களை, யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|