பதிவு செய்த நாள்
27 ஆக2012
23:42
அகமதாபாத்: இந்தியாவில், ஒட்டுமொத்த அளவில், சென்ற 2011-12ம் நிதியாண்டில், 1.78 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, 763 அன்னிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என, "அசோசெம்' அமைப்பு தெரிவித்துள்ளது.சென்ற நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களை அதிக அளவில் ஈர்த்ததில், ஒடிசா முதலிடத்தை பிடித்துள்ளது. இம்மாநிலத்தில், 49,527 கோடி ரூபாய் மதிப்பிலான, 17 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.அடுத்து, ஆந்திரா, 33,936 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 70 அன்னிய முதலீட்டு திட்டங்களை ஈர்த்துள்ளது. அடுத்த இடங்களில் குஜராத் (20,258 கோடி ரூபாய்), சட்டீஸ்கர் (20 ஆயிரம் கோடி ரூபாய்), கர்நாடகா (14 ஆயிரம் கோடி ரூபாய்), மகாராஷ்டிரா (12 ஆயிரம் கோடி ரூபாய்), மேற்கு வங்கம் (1,243 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.ராஜஸ்தான், தமிழகம், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள், 1,200 கோடி ரூபாய் முதல், 8,600 கோடி ரூபாய் வரையிலான அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களை ஈர்த்துள்ளன.கணக்கீட்டு காலத்தில், தொலைத்தொடர்பு, கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், ரசாயனம், மருந்து, மின்சாரம், மோட்டார் வாகனம், உலோகம் ஆகிய துறைகளில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|