தங்கம் விலை சற்று  உயர்வுதங்கம் விலை சற்று உயர்வு ... தலைமை பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்பு தலைமை பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்பு ...
கூட்டணி அமைத்து டயர் விலை குறைக்காத நிறுவனங்கள் சந்தை போட்டிகள் கமிஷன் அபராதம் விதிக்குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2012
14:50

அனைத்து இந்திய டயர் டீலர்கள் கூட்டமைப்பு( ஏ.ஐ.டி.டி.எஃப்.,) என்ற அமைப்பு, இந்திய சந்தை போட்டிகள் கமிஷன்( சி.சி.ஐ.,) என்ற அரசு நிறுவனத்திடம், ஒரு புகாரை அளித்தது. இந்திய சந்தையில் நிறுவனங்களுக்கு இடையோன போட்டியை முறைப்படுத்த இந்த நிறுவனம் செயல்படுகிறது.

இந்தியாவில் செயல்படும், அப்பலோ டயர்ஸ், எம்.ஆர்.எஃப்., ஜெ.கே., சியட் மற்றும் பிர்லா டயர்ஸ் போன்ற டயர் நிறுவனங்கள், டயர்கள் விலையை, தொடர்ந்து உயர்த்தி கொண்டே இருக்கின்றன. டயர் உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்களான, இயற்கை ரப்பர் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை, 2010ம் ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரை, 30 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது. இருந்தாலும், டயர்களின் விலையை குறைக்க, டயர் நிறுவனங்கள் முன் வரவில்லை.
கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில், இயற்கை ரப்பரின் விலை கிலோ ரூ.240 என்ற அளவில் இருந்தது. தற்போது இது, கிலோ ரூ.174 என்ற அளவுக்கு குறைந்து விட்டது. இதே போன்று தான் டயர் உற்பத்திக்கு தேவைப்படும் பெட்ரோலிய பொருட்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், டயர் நிறுவனங்கள கூட்டணி அமைத்து, டயர் விலையை குறைக்காமல் வைத்துள்ளன என்று புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை, ஏழு உறுப்பினர்கள் கொண்ட, சி.சி.ஐ., விசாரிக்க தொடங்கியது. டயர் டீலர்கள் தரப்பு மற்றும் மோட்டார் வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கம்( ஏ.டி.எம்.ஏ.,) தரப்பு என இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டு, இதன் விசாரணை, கடந்த ஃபிப்ரவரி மாதத்துடன் முடிந்து விட்டது. மேலும், சி.சி.ஐ., தனது இறுதி அறிக்கையை சமர்பித்து விட்டது. எனவே, எந்த நேரத்திலும், டயர் நிறுவனங்களுக்கு எதிரான உத்தரவு வரும் என்று, டயர் டீலர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், டயர் நிறுவனங்களுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான மொத்த விற்றுமுதலில், 10 சதவீதம் வரை அபராதம் விதிக்க, சந்தை போட்டிகளுக்கான சட்டம் 2002ல், கூறப்பட்டுள்ளது. எனவே, அபராதம் நிச்சயம் என்ற அளவில் டயர் டீலர்கள் தரப்பில் உள்ளனர். ஆனால், இந்த விஷயத்தில் டயர் உற்பத்தியாளர்கள் இதுவரை வாயை திறக்க மறுக்கின்றனர். சிமென்ட் நிறுவனங்களுக்கு எதிராக இதே போன்று ஒரு புகார் கூறப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர்கள், சந்தை போட்டிகள் அப்பீல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தனர். இதுபோல, டயர் நிறுவனங்களுக்கும் அப்பீல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)