பதிவு செய்த நாள்
29 ஆக2012
14:50
அனைத்து இந்திய டயர் டீலர்கள் கூட்டமைப்பு( ஏ.ஐ.டி.டி.எஃப்.,) என்ற அமைப்பு, இந்திய சந்தை போட்டிகள் கமிஷன்( சி.சி.ஐ.,) என்ற அரசு நிறுவனத்திடம், ஒரு புகாரை அளித்தது. இந்திய சந்தையில் நிறுவனங்களுக்கு இடையோன போட்டியை முறைப்படுத்த இந்த நிறுவனம் செயல்படுகிறது.
இந்தியாவில் செயல்படும், அப்பலோ டயர்ஸ், எம்.ஆர்.எஃப்., ஜெ.கே., சியட் மற்றும் பிர்லா டயர்ஸ் போன்ற டயர் நிறுவனங்கள், டயர்கள் விலையை, தொடர்ந்து உயர்த்தி கொண்டே இருக்கின்றன. டயர் உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்களான, இயற்கை ரப்பர் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை, 2010ம் ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரை, 30 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது. இருந்தாலும், டயர்களின் விலையை குறைக்க, டயர் நிறுவனங்கள் முன் வரவில்லை.
கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில், இயற்கை ரப்பரின் விலை கிலோ ரூ.240 என்ற அளவில் இருந்தது. தற்போது இது, கிலோ ரூ.174 என்ற அளவுக்கு குறைந்து விட்டது. இதே போன்று தான் டயர் உற்பத்திக்கு தேவைப்படும் பெட்ரோலிய பொருட்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், டயர் நிறுவனங்கள கூட்டணி அமைத்து, டயர் விலையை குறைக்காமல் வைத்துள்ளன என்று புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை, ஏழு உறுப்பினர்கள் கொண்ட, சி.சி.ஐ., விசாரிக்க தொடங்கியது. டயர் டீலர்கள் தரப்பு மற்றும் மோட்டார் வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கம்( ஏ.டி.எம்.ஏ.,) தரப்பு என இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டு, இதன் விசாரணை, கடந்த ஃபிப்ரவரி மாதத்துடன் முடிந்து விட்டது. மேலும், சி.சி.ஐ., தனது இறுதி அறிக்கையை சமர்பித்து விட்டது. எனவே, எந்த நேரத்திலும், டயர் நிறுவனங்களுக்கு எதிரான உத்தரவு வரும் என்று, டயர் டீலர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், டயர் நிறுவனங்களுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான மொத்த விற்றுமுதலில், 10 சதவீதம் வரை அபராதம் விதிக்க, சந்தை போட்டிகளுக்கான சட்டம் 2002ல், கூறப்பட்டுள்ளது. எனவே, அபராதம் நிச்சயம் என்ற அளவில் டயர் டீலர்கள் தரப்பில் உள்ளனர். ஆனால், இந்த விஷயத்தில் டயர் உற்பத்தியாளர்கள் இதுவரை வாயை திறக்க மறுக்கின்றனர். சிமென்ட் நிறுவனங்களுக்கு எதிராக இதே போன்று ஒரு புகார் கூறப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர்கள், சந்தை போட்டிகள் அப்பீல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தனர். இதுபோல, டயர் நிறுவனங்களுக்கும் அப்பீல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|