பதிவு செய்த நாள்
31 ஆக2012
00:12
புதுடில்லி:வெளிச் சந்தையில், மேலும் 30 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்ய, பொருளாதார விவகாரங்களுக்கான முக்கிய அமைச்சர்கள் குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.
மாவு ஆலைகளின் தேவையை பூர்த்தி செய்யவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அதிகளவில் உள்ள கோதுமையின் கையிருப்பை குறைக்கவும், இத்தகைய நடவடிக்கை உதவும் என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வெளிச் சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், இந்திய உணவு கழகம், ஏல முறையில், ஒரு குவிண்டால் கோதுமையை 1,170 ரூபாய் என்ற அடிப்படை விலையில் விற்பனை செய்து வந்தது. இது, நடப்பு மாதத்தில், 1,285 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேசமயம், கடந்த ஒரு மாதத்தில், டில்லி மொத்த விலை அங்காடிகளில், ஒரு குவிண்டால் கோதுமை விலை 22 சதவீதம் உயர்ந்து, 1,625 ரூபாயாக அதிகரித்துள்ளது. பருவமழை குறைவால், ரபி பருவத்தில் இதன் உற்பத்தி குறையும் என்ற மதிப்பீடும், வெளிச் சந்தையில் இதன் வரத்து குறைந்ததுமே இதற்கு முக்கிய காரணம்.கடந்த சில ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்து வருவதையடுத்து, ஆகஸ்ட் 1ம் தேதி வரையிலான காலத்தில், மத்திய அரசின் உணவு தானிய கையிருப்பு மிக அதிகளவாக, 7.61 கோடி டன் என்ற அளவில் உள்ளது.
இதில், கோதுமையின் பங்களிப்பு 4.75 கோடி டன் என்ற அளவில் உள்ளது. எனினும், நம்நாட்டில், 7.14 கோடி டன் தானியங்களை சேமித்து வைக்கும் அளவிற்கே கிடங்கு வசதிகள் உள்ளன. பருவமழை காலத்தில், சேமிப்பு கிடங்குகளில் உள்ள கோதுமை வீணாவதை தடுக்கும் நோக்கில், சென்ற ஜூன் மாதத்தில், வெளிச் சந்தையில் 30 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|